நேர்மை
நேர்மை
நேர்மை
விநாயகம் ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு உயர்ந்த பதவியில் பணி புரிந்து வந்தார். அவருக்கு எதையும் நேர்வழியில் செய்ய வேண்டும் ,ஒரு சின்ன காரியமும் கூட செய்து முடிக்கும் போது அதில் நேர்மையை எதிர்பார்ப்பார்.
நிர்வாகம் காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்பும் .சில நேரங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை முடியும் என்றால் நிர்வாகம் கொடுக்க தயங்கியதே இல்லை .
தற்காலத்தில் அரசாங்கத்தில் ஒரு வேலை ஆக வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்கும் பணத்தை பார்த்து அதன் வேகம் கூடுகிறது
ஒரு நாள் வரி சரியாக செலுத்தவில்லை என்று வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வுக்கு வந்து விட்டார்கள். விநாயகம் அவர்கள் கேட்ட அத்தனை விவரங்களும். ஒரு கோப்பு செய்து அதில் போட்டு கொடுத்த பிறகும் ,விவரங்கள் தவறாக இருக்கிறது தவறான விவரங்கள் கொடுத்த காரணத்திற்காக நூறு சதவீதம் அபராதம் விதிக்க சட்டத்தில் வழி இருக்கிறது அபராதம் ஏன் விதிக்க கூடாது என்று விளக்கம் கேட்டனர்..விளக்கம் கொடுத்தாலும் அதை அவர்கள் பூர்ணமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.அபராதத்தை குறைக்க அவர்கள் லஞ்சம் எதிர்பார்த்தனர் ஆனால் விநாயகம் கொடுக்க முடியாது சரியான விளக்கங்கள் கொடுத்தும் ஏன் அபராதம் விதிக்க வேண்டும் என்று பதிலுக்கு வினவினார்.அதிகாரிகள் நிர்வாகத்தை சந்திக்க வேண்டும் என்று சொல்லி அவர்களின் எதிர்பார்ப்பை நேரடியாக நிர்வாகத்திடம் சொல்லி விட்டார்கள் .நிர்வாகமும் அதற்கு சம்மதித்து பணத்தை கொடுத்து தங்களுக்கு சாதகமாக வேலையை முடித்துக் கொண்டார்.
விநாயகத்திற்கு இது ஒரு தன்மான பிரச்சனை .சரியாக கணக்குகள் வைத்து இருந்தும் மிரட்டலுக்கு பயந்து பணம் கொடுத்தது எனக்கு கெட்ட பெயர் உண்டாகி விட்டது இன்னும் அந்த பதவியில் தொடர்ந்து இருக்க விருப்பம் இல்லை என்று வேலையா ராஜினாமா செய்வதாக சொல்லி விட்டார் .
நிர்வாகம் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தது அவர் மீது தவறு கண்டு பிடித்து அந்த பணத்தைகொடுக்க
வில்லை,கொடுத்தது நிர்வாகத்தின் சொந்த விருப்பு விநாயகம் எந்த தவறும் செய்யவில்லை என்று அவரிடம் மன்னிப்பு கேட்டது .
அதனால் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறி மீண்டும் அவர் அதே பதவியில் தொடர்ந்து பணி செய்யும் படி கூறி விட்டது.
இது விநாயகத்தின் நேர்மைக்கு கிடைத்த பரிசு