STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

மயில் பச்சை

மயில் பச்சை

1 min
337

மயில் பச்சை

ஆசைகள் நிறைவேறும் என்று அன்றைய ராசி பலனை படித்தான்

கண்ணன்.தனக்கு என்ன ஆசை இருக்கப்போகிறது.

ஆசை பட்டதெல்லாம் நடந்து விட்டதா என்ன, என்று மனதில் சலித்து கொண்டு,வேலைக்கு கிளம்பினான்.

வாலிப பருவம் முதலே அவனுடைய மனதில் தன் அத்தை பெண் சுமதியை திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை.ஆனால் அவள் படித்து,தேர்வு எழுதி இப்போது ஒரு பள்ளியில் ஆசிரியை ஆக பணியாற்றி வருகிறாள்.அரசாங்க பள்ளியில் வேலை,கை நிறைய சம்பளம்.

கண்ணன் நல்ல உடல்வாகு,ராணுவத்தில் சேர வேண்டும் என்று கல்லூரியில் படிக்கும் போதே கனவு கண்டு கொண்டு இருந்தான்.அதனால் வேறு எந்த வேலைக்கும் போகாமல் 

இருக்கிறான்.இந்த நிலைமையில்

அவளிடம் தன் விருப்பத்தை எப்படி சொல்வான்.

காத்து இருந்து இன்னும் ராணுவத்தில் சேர முடியாத காரணத்தால் இனியும் தாமதிக்க வேண்டாம்,வயது முதிர்ந்து விடும் என்று எண்ணி, வங்கி அதிகாரி பணிக்கு கடந்த மாதம் தன் தேர்வு எழுதி இருந்தான்.

சுமதிக்கு அவனுடைய விருப்பம் தெரிந்து இருந்தது.அவனுக்கு வேலை இல்லாவிட்டாலும் திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தாள்.அவனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விட கூடாது ஏதாவது ஒரு வேலையில் சேரட்டும் என்று காத்து இருந்தாள்.

அது வீண் போகவில்லை,அவனுக்கு வங்கியில் வேலை கிடைக்க,நியமன கடிதம் வந்து சேர்ந்தது.இருவருடைய ஆசையும் நிறைவேறியது.


Rate this content
Log in

Similar tamil story from Abstract