மஞ்சள்
மஞ்சள்
வேணிக்கு ஒரே மகள்.கௌரிமென்பொருள் நிறுவனத்தில் வேலை.சரி மாதம் முன்பு திருமணம் நடந்து,முடிந்த கையோடு மாப்பிள்ளைக்கு அமெரிக்காவில் பணி புரிய வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா சென்று விட்டாள்.
அங்கு போனதும் கரு தரித்து விட,, வேணி மகளுடன் சென்று இருக்க விருப்ப பட்டாள்.
ஆனால் அமெரிக்கா விசா கிடைக்க இன்னும் ஒரு வருடம் ஆகலாம் என்று அறிந்த போது,வேணி மிகவும் சோர்ந்து போனாள்.
அம்மா வர முடியாததால்,உடனே இந்தியாவிற்கு புறப்பட்டு வர மகளால் முடியவில்லை.அதனால் வேணி கண்டிப்பாக அமெரிக்கா சென்றாக வேண்டும்.
என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை.இந்தக்கவலையுடன் வீட்டில் இருக்கும் போது,ஒரு பெரிய கார் வந்து வீட்டு வாசலில் நிற்க,அதில் இருந்து ஒரு கரை வேட்டி கட்டிய வாலிபன் இறங்கி வர,வேணி கதவை திறந்து வாசலுக்கு வர,அத்தை நலமா என்று கேட்டுக்கொண்டு மூர்த்தி வந்தான்.
மூர்த்தி வேணி யின் அண்ணன் மகன்.இப்போது ஒரு பிரபல அரசியல் கட்சியின் மாநில தலைவர்,அதுவும் மத்தியில் ஆட்சி புரியும் கட்சி.
அண்ணன் அவனுக்கு தான் வேணி மகளை கேட்க,அவனுக்கு வேலையில்லை என்று நினைத்து பெண் கொடுக்கவில்லை.அதனால் அவன் முகத்தை பார்க்க கூடதயக்கம்.
அவனோ அதை எதையும் கண்டு கொள்ளாமல் கையில் திருமண அழைப்பிதழ் வைத்து கொண்டு
வீட்டின் உள்ளே வந்து மாமா எங்கே என்று கேட்டுக்கொண்டு,தனக்கு திருமணம்.மத்தியில் அமைச்சராக இருக்கும் ஒருவருடைய ஒரே மகள்
தான் அவனுக்கு வருங்கால மனைவி என்று சொல்லிக்கொண்டே அழைப்பிதழை கொடுத்து விட்டு,கௌரி எங்கே அத்தை என்று கேட்க வேணி
அமெரிக்க விசா வரை எல்லா விவரமும் கூற,
வருங்கால மாமனார் தான் வெளியுறவு அமைச்சர்
அவரிடம் கூறி சீக்கிரம் ஏற்ப்பாடு செய்து கொடுப்பதாக கூறி வாங்கியும் கொடுத்து விட்டான்.
ஒரு நல்ல நாளில் கௌரியை பார்க்க வேணி அமெரிக்கா புறப்பட்டாள்.இதை கேட்ட கௌரிக்கு வந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை
