STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

மஞ்சள் நோட்டீஸ்

மஞ்சள் நோட்டீஸ்

1 min
8

சிவராமன் அந்த ஊரில் உள்ள பிரபல வியாபாரிகளில் அவரும் ஒருவர்.அவரிடம் இல்லாத வியாபாரம் இல்லை.

கோடிக்கணக்கில் பணம் புரளும் என்று அந்த ஊர் மக்கள் பேசி கொண்டு இருந்தனர்.சுமார் ஐநூறு பேர் அவரிடம் வேலை செய்து வந்தார்கள்.

பிரதி மாதமும் புதிதாக வேலைக்கு

ஆள் எடுப்பார்கள்.ஏனோ தெரியவில்லை,அதே அளவில் ஆட்கள் வேலையை விட்டு போய் கொண்டும் இருந்தார்கள்.

கொடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் செய்து முடிக்காவிட்டால் வேலையில் இருந்து நீக்கி விடுவார்கள் என்று மக்கள் பேசி கொண்டு இருந்தார்கள்.

ஆனாலும் அவரது நிறுவனத்தில் வேலை கிடைத்து ஒரு வருடம் தாக்கு பிடித்து விட்டால்,

அப்புறம் வேலை நிரந்தரமாகி விடும்.

நிரந்தரம் ஆன பிறகு எதிர்பார்க்காத சம்பளம் கிடைக்கும் என்று அங்கு வேலைக்கு சேர கடும் போட்டி நிலவும்.

ஒரு வருட சம்பளம் தீபாவளி போனஸ் ஆக கிடைக்கும்.அது போக இலக்குகளை அடைந்தால் 

கிடைக்கும் பரிசு பொருள்கள் ஏராளம்.

அப்படி பெயர் பெற்று,ஓகோ என்று நடந்து வந்த அந்த நிறுவனம் ஒரு நாள் காலையில் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விட்டது.

அதாவது வியாபாரம் திவாலாகி விட்டது என்று சொல்லி விட்டார்கள்.

உடனே கடன் கொடுத்த அத்தனை வங்கிகளும் வந்து அந்த நிறுவனத்திற்கு ஆளுக்கொரு பூட்டை போட்டு விட்டு சென்றனர்.

மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை.கோடிகளில்

புரண்டவர் எப்படி இப்படி ஆனார் என்று என்று

எல்லோரும் ஆச்சரிய பட்டு போனார்கள்.

சிவராமன்,பணம் சேர,அதை நண்பர்கள் சொன்னார்கள் என்று பங்கு சந்தையில் முதலீடு செய்து, அதை தினமும் விற்க வாங்க என்று

செய்து கொண்டு இருக்க,ஆரம்பத்தில் சிறிது லாபம் கிடைக்கும்,அதை நம்பி பெரிய தொகை

அதில் முதலீடு செய்ய,பெரும் இழப்பை சந்தித்தார்.

இழந்ததை மீட்க,மேலும் கடன் வாங்கி முதலீடு செய்ய,மீண்டும் இழப்பு சந்திக்க,அதில் இருந்து மீள முடியாத நிலை வந்த போது திவால் நோட்டிஸ் 

கொடுத்து விட்டார்.

ஆனால் பொது மக்களுக்கு இது தெரியாமல் போனது.

முற்றும்



Rate this content
Log in

Similar tamil story from Abstract