மந்திர கோல்
மந்திர கோல்
ஒரு ஊரில் ஒரு மந்திரவாதி இருந்தார்.அவர் கையில் வைத்து இருக்கும் மந்திர கோலை வைத்து பல வித்தைகள் காண்பித்து வந்தார்.
அதனால் அந்த ஊர் மக்கள் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்து இருந்தனர்.
அதில் ஒருவர் மட்டும் மந்திரவாதியை மோசமாக பேசி வந்தார்.தந்திரம் தான் மந்திரம்
மக்களை ஏமாற்றி வருகிறார் என்று
கூறி வந்தார்.
அந்த வருடம் அளவுக்கு மீறி மழயும்
வறட்சியும் ஏற்பட விவசாயம் பொய்த்து போனது.உணவுக்கு பஞ்சம்.மக்களுக்கு சாப்பிட தண்ணீர் கூட கிடைக்க வில்லை.
அந்த நேரத்தில் மக்கள் எல்லோரும் சென்று மந்திரவாதியை பார்த்து
சாப்பிட உணவு ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று கேட்க,அவரும் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து மந்திர கோலல் கிளற
அறுசுவை உணவு தயார்.
மக்கள் வரிசையில் நின்று வாங்கி வந்தனர்.அவதூறு பேசிய ஆள்
முதலாக வந்து உணவை வாங்கி சாப்பிட்டார்.