மலை ஏற்றம்
மலை ஏற்றம்
யஷ்வந்த் அன்று ஒரு மலை நிறைந்த பகுதிக்கு மலை ஏற பயிற்றுவிக்கும் டீமுடன் காரில் சென்று கொண்டிருந்தான்.
புது முக ஹீரோ ஆன யஷ்வந்த் தனது முந்தைய இரண்டு படங்களில் நன்றாக நடித்திருந்தார்,இயல்புடன் ஒன்றி போகும் நடிப்பு ரசிகர்கள்,விமர்சகர்கள் பாராட்டை ஒன்றாக பெற்றது.
தற்போது உழைத்து கிடைத்த பெயரை தக்க வைத்து கொள்வது அவ்வளவு சுலபம் இல்லை,அதுபோல மக்கள் சும்மாவெல்லாம் ஒரு கலைஞனுக்கு தர மாட்டார்கள்.
அடுத்த படம் ஒரு பழங்கால போர் வீரன் கதை ஆகையால் மலை ஏறும் காட்சிகள் நிறைய இருந்ததால் பிரத்யேக பயிற்சி பெற யஷ்வந்த் முடிவு செய்திருந்தான்.
யஷ்வந்தின் மெனெஜர் தருண் அனைத்து ஏற்பாடுகளையும் இரண்டு,மூன்று தடவை சரி பார்த்து,பாதுகாப்பு உபகரணங்கள் தயாராக இருக்க வைத்து விட்டு டீ குடிக்க காருக்கு சென்றார்.
ஆனால் அதிகலை முதல் கட்ட சிறிய பயிற்சியான உடற்பயிற்சியை யஷ்வந்த சரியாக செய்யவில்லை.
பின்பு அன்று மலை வந்ததால் சீக்கிரம் அனைத்தையும் எடுத்துக் கொண்டு குழு அங்கிருந்து கிளம்பியது.
வெளியே பெய்த மழை,யஷ்வந்தின் மனதிலும் ஒரு மின்னலை உண்டாக்கியது.
ஆம்,காதல் எனும் அந்த மின்னல் யஷ்வந்தின் மனதை இரண்டு வருடங்களுக்கு முன் தாக்கியது.
அப்பொழுது யஷ்வந்த் படத்திற்கு உணவு கேட்டரிங் செய்யும் குழுவின் இன்சார்ஜ் ஆக வந்த ஜாஸ்மின் இடம் யஷ்வந்த் பேச வாய்ப்பு கிடைத்தது.
இருவரும் சந்திக்க,சந்திக்க காதல் அவர்கள் அறியாமல் உள்ளே வளர்ந்தது.
இருவரின் வீட்டிலும் தெரிவிக்க எதிர்ப்பு மெல்ல எழுந்தது.
யஷ்வந்த் அவன் வீட்டாரை சம்மதிக்க வைத்தாலும், ஜாஸ்மின் வீட்டார் மாப்பிள்ளை நல்லவராக இருந்தாலும் சினிமாவில் இருக்கிறார் யோசித்து சொல்றோம் என சொல்லி விட்டனர்.
சினிமாவில் வரும் அந்த தற்காலிக தோற்றத்தை விரும்பாமல்,நிஜத்தில் அந்த சினிமா நபரை விரும்ப வேண்டும்,அது மட்டுமல்லாது,சினிமாவில் எந்த பிரச்சனையிலும் சிக்க கூடாது, கிசுகிசுக்கள் ஒரு சினிமா நபரின் வாழ்க்கையை கேலி கூத்தாக்கி விடும்.
யஷ்வந்த் இன்னும் அந்த முடிவுக்காக காத்திருந்தான்.
பின்பு எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என அடுத்த நாள் முதலில் பயிற்சி தொடங்கியது.
1 மாதம் கழித்து,
மத்தியானம் யஷ்வந்த் தனது பயிற்சியை முடித்து மழை ஏற தொடங்கிய நேரம் மத்தியம்,மெல்ல மெல்ல சூரியன் உச்னம் அதிகமாக யஷ்வந்த் தன் வேகத்தை குறைத்து மெல்ல ஏற ஏற அங்கு உள்ள குகை ஒன்றின் உள்ளே சென்று அமர்ந்தான்.
முதல் நாள் இரவு,
ஜாஸ்மின்: யஷ்வந்த் சாரி,என்னால உங்கள கல்யாணம் பண்ணிக்க முடியாது.
யஷ்வந்த்: புரியுது.
ஜாஸ்மின்: என்னால இந்த சினிமா, ஆடம்பரம் எல்லாம் தாங்க முடியாது.நீங்க என்னை மறப்பது நம்ம இரண்டு பேருக்கும் நல்லது.
யஷ்வந்த்: உங்கள் முடிவை நான் ஏத்துக்கிறேன்.போன் கட் பண்றேன்.
யஷ்வந்த அந்த இரவு தாங்க முடியாத வலியை அனுபவித்தது.
அடுத்த நாள்,மலை ஏற வேண்டும் என்பதை நினைத்து கொண்டு மனதை தயார்படுத்தினான்.
அடுத்த நாள்,காலை அவன் மனதை ஒரு நிலைப்படுத்த அதிக நேரமானதால் மத்தியானம் மலை ஏற ஆரம்பித்தான்.
அன்று மாலை சரியாத நான்கு மணிக்கு மலை ஏறி அவன் நிற்க அங்கு மலை மேலும்,கீழும் காத்திருந்த குழு அவனை உற்சாகப்படுத்தியது.
அதை நேரம்,ஜாஸ்மின் வீட்டில் நிச்சயம் நடந்து கொண்டிருக்க அவளும்,அவளுக்கு பார்த்த மாப்பிள்ளையும் மோதிரம் மாற்றிக் கொள்ள அங்கு இருந்தவர்கள் கை தட்டினார்கள்.