மைண்ட் வாய்ஸ்
மைண்ட் வாய்ஸ்
மைண்ட் வாய்ஸ்
மிக நெருக்கமாக வீடுகள் அமைந்த அந்த பகுதியில் இரண்டாவது வீதியில்,முதல் வீடு.
பல ஆண்டுகளுக்கு முன்பு டெரஸ் .
போட்ட வீடு.மாநகராட்சி அதை இடித்து கட்டவும் கடிதம் அனுப்பி விட்டார்கள்.
அதில் நான்காம் தலைமுறையில் வந்த ரகு மனைவி மகனுடன் வசித்து வந்தார்.மகன் விஷ்ணு கல்லூரி படிப்பை முடிக்க போகிறான்.வளாக நேர்காணலில் ஒரு பிரபல நிறுவனத்திற்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலைக்கும் தேர்வாகி விட்டான்.
இன்னும் இரண்டு மாதத்தில் பணிக்கு சேர வேண்டும்.அந்த நிர்வாகம் பாஸ்போர்ட் எடுத்து அதன் விவரத்தை தெரிய படுத்த சொல்லி இருந்தது.
அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தான்.நாளைக்கு திங்கள்கிழமை,விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டிய நாள்.
முந்தைய இரவு அவனுக்கு சரியாக தூக்கம் வரவில்லை.அடிக்கடி யாரோ எழுப்பிக்கொண்டே இருந்தார்கள்.
உண்மையில் அப்படி யாரும்
செய்யவில்லை.
ஆனால் அவனால் நன்றாக உணர முடிந்தது.அவனுடைய கையை பிடித்து உலுக்கி எழுப்பி விட்டார்கள்.
நினைவு வந்ததும்,அவன் வேலைக்கு போகும் நிறுவனம் சீக்கிரமே இழுத்து மூட போகிறார்கள்
என்று யாரோ சொன்னது போல இருந்தது.
வெறும் கனவு தானே என்று நினைத்து அடுத்த நாள் பாஸ்போர்ட் விண்ணப்பம் கொடுத்து வந்து விட்டு,அந்த தகவலை அந்த நிறுவன அதிகாரிக்கு சொல்ல நினைத்து அவரது எண்ணை அழைத்தான்.
ஆனால் மறுமுனையில் அது அணைக்க பட்டு இருக்கிறது என்று
ஒரு குரல் அவனுக்கு கேட்க,அவன் மிகவும் குழம்பி விட்டான்.
தொடர்ந்து இரண்டு நாள் முயற்சித்தும் அவனால் தொடர்பு கொள்ள முடியவில்லை.மூன்றாவது நாள் ஒரு அதிர்ச்சியான செய்தி அவனுக்கு காத்து இருந்தது.
வெளி நாட்டு செலவாணி தில்லுமுல்லு செய்த காரணத்தால் ஜிஅமலாக்க துறையால் அந்த நிறுவனம் முடக்க பட்டு விட்டது.
விஷ்ணு தன் தந்தையிடம் கனவில்
வந்த செய்தியை சொல்லி,இப்போது தினசரியில் வந்த செய்தி மூலம் அது ஊர்ஜிதம் ஆகி விட்டது என்று சொன்னான்.
ரகு அப்படி இருக்காது, என்று அவனிடம் சொன்னாலும் அதை முழுமையாக புறந்தள்ள முடியவில்லை.,காரணம் விஷ்ணு,
ஏற்கனவே சொன்ன ஒரு விசயம் அவருக்கு நினைவிற்கு வந்தது.
ரகுவின் அப்பா அந்த வீட்டின் பத்திரத்தை எங்கு இருக்கு என்று சொல்லாமல் கொள்ளாமல் இறந்து போய் விட்டார். ரகுவும் எங்கெல்லாமோ தேடியும் கிடைக்கவில்லை.
அப்போது ஒரு நாள் விஷ்ணு,அலமாரியில் அடியில் ஒரு ரகசிய அறை இருக்கும் எதற்கும் தேடி பாருங்கள் என்று சொன்னான்.உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டதற்கு என்னுடைய மைண்ட் வாய்ஸ் சொல்லிச்சு என்று கூறினான்.அப்படி தேடி பார்க்க,ஒரு ரகசிய அறை இருந்தது.அதில் அந்த பத்திரமும் இருந்தது.
அதனால் விஷ்ணுவிற்கு ஏதோ ஒரு அசாதாரண சக்தி இருக்கு என்பதை இப்போது ரகு புரிந்து கொண்டான்.
இப்போதெல்லாம் விஷ்ணு எதேச்சையாக சொல்வதை கவனத்தில் வைத்து கொண்டு அப்படி நடக்கிறதா என்பதை கவனிக்க தொடங்கினான்.
மாநகராட்சி வீட்டை இடிக்குமா என்று கவலை பட்டு கொண்டு இருந்தான்,அப்போது விஷ்ணு இதை இடிக்க மாட்டாங்க,கவலை படாதீங்க என்று சொல்லி வைக்க,இதுவும் அவன் மைண்ட் வாய்ஸ் படி நடந்தால் சரி என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்.
கடைசியில் அவன் வீடு இடிக்க படாது,அந்த பகுதி புராதன கட்டிடங்கள் உள்ள பகுதி என்று அரசாங்கம் சொல்லி விட்டது.