Vadamalaisamy Lokanathan

Abstract

5  

Vadamalaisamy Lokanathan

Abstract

கடல் உயிர் இனங்கள்

கடல் உயிர் இனங்கள்

2 mins
494



கடல் உயிரினங்கள்


பீட்டர் கடற்கரையோர கிராமத்தில் வசித்து கொண்டு மீன் பிடிப்பதை தொழிலாக கொண்டவன்.

அவனுடைய அப்பா அந்த மீனவ கிராமத்தில் மீன் பிடிப்பதில் அனுபவம் வாய்ந்தவர்.எந்த கால நிலையிலும் கடலுக்குள் செல்ல தயங்காதவர்.

அவர் இருக்கும் போதே அதன் நுணுக்கங்களை 

தனது மகன் பீட்டருக்கு சொல்லி கொடுத்து இருக்கிறார்.


வலையில் பல உயிரினங்கள் மாட்டும் ஆனால் அத்தனையும் வியாபாரத்திற்கு அல்ல. சிலவற்றை திரும்பவும் கடலுக்குள் விட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.

அதில் முக்கியமாக கடல் ஆமைகள்.அது பல ஆண்டுகள் உயிரோடு இருக்கும்.அதை எக்காரணம் கொண்டும் வேட்டையாட கூடாது என்று கூறி இருக்கிறார்.


பீட்டரும் அதை கெட்டியாக கடை பிடித்து வருகிறான்.

அன்று நல்ல மழை.இரண்டு நாட்களுக்கு யாரும் மீன் பிடிக்க போக வேண்டாம் என்று அரசாங்கம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தவன், மழை சற்று ஓய்ந்தது,ஒரு டீ குடிக்கலாம் என்று பக்கத்தில் இருந்த டீ கடைக்கு சென்றான். மழை விட்டதும் அப்போது தான் கடையை திறந்து இருந்தார்.

சுமார் பத்து பேர், மழை எப்ப நிற்கும்,கடலுக்குள் போக என்று பேசி கொண்டு டீ குடித்து கொண்டு இருந்தனர்.

அப்போது அவனுடைய சித்தப்பா பையன் அருள் ஒருவனுடன் டீ குடிக்க வந்தான். அவனை பார்த்த பீட்டர் யாருடா புதிதாக வந்து இருக்காங்க என்று கேட்க,தெரிந்தவர். போட் முதலாளிக்கு நண்பர் என்று சொன்னான்.

ஆனால் பீட்டருக்கு அந்த முகத்தை பிடிக்கவில்லை.ஏதோ தப்பு செய்ய வந்தவன் போல இருந்தது அவன் நடவடிக்கை.அவனும் அருளும் பேசி கொண்டு இருப்பதை யதேச்சையாக கேட்க நேர்ந்தது.

வந்தவன் ஒரு கடல் ஆமை வேண்டும்,காட்சி பொருளாக ஒரு பள்ளியில் வைக்க கேட்கிறார்கள்.

ஒரே ஒரு ஆமை மட்டும் பிடித்து கொடுத்தால் போதும் என்று அருளுடன் பேரம் பேசி கொண்டு இருந்தான்.


பீட்டருக்கு அப்பா சொன்னது நினைவிற்கு வந்தது.இப்படி கேட்டு கொண்டு காசு நிறைய கொடுக்கிறேன் என்று ஆசை காட்டுவார்கள்.ஏமாந்து விட கூடாது என்று சொல்லி இருக்கிறார்.அப்படி பிடித்து கொண்டு போய்,கள்ள சந்தையில் விற்று பெரும் பணம் சம்பாதித்து விடுவார்கள்., என்று கூறியது நினைவிற்கு வர,தொடர்ந்து அருளை கண்காணித்து வர,வாரத்தில் ஒரு கடல் ஆமை யாருக்கும் தெரியாமல் பிடித்து வந்து அன்று வந்தவனுக்கு விற்று பணம் சம்பாதித்து கொண்டு இருந்தான்.


இதை பீட்டர் சங்கத்தில் சொல்ல,அருளுக்கு தடை விதித்து விட்டார்கள்.அந்த கோபத்தில் பீட்டரை அடிக்க வந்து தகராறு முற்றி,அருள் இப்போது ஜெயிலில் இருக்கிறான்.

மீன் பிடித்து விற்றால் போதுமான காசு கிடைக்கும் போது எதற்கு அருளுக்கு இந்த வேலை என்று எல்லோரும் பேசி கொண்டு,தக்க சமயத்தில் அதை கண்டு பிடித்த பீட்டரை பாராட்டி வாழ்த்தினார்கள்.


முற்றும்



Rate this content
Log in

Similar tamil story from Abstract