STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

கருப்பு

கருப்பு

1 min
23

செழியன் வயது முப்பது.இன்னும் திருமணம் ஆகவில்லை.காரணம் வசதி சற்று குறைவு,சுய தொழில் செய்து வருமானம் ஈட்டி வருகிறான்.

மாதம் முப்பதாயிரம் சம்பாதித்து கொண்டு இருக்கிறான்.ஆனால் அதை நிரூபிக்க அவனிடம் தடயம் எதுவுமில்லை.

வெயிலில் நின்று கொண்டு தான் பாடுபட வேண்டி இருக்கு.சிறு வயதில் மாநிறம் இருந்தவன்,

இப்போது சூரிய கதிர்கள் அவன் தோலை கருமை ஆக்கி விட்டது.

கடைசியாக ஒரு பெண்ணை பார்த்தான்.அவளும் பெரிய நிறம் கிடையாது.முகத்தில் பவுடர் பூசி

வெள்ளையாக வந்து நின்றாள்.

அவளும் தினசரி வேலைக்கு போனால் தான் வருமானம்.

செழியன் திருமணமாகி வந்தால் வேலைக்கு செல்ல வேண்டாம் வீட்டில் இருந்து அவனுக்கு சமைத்து போட்டால் போதும் என்று 

சொல்ல,அவளுடையபெற்றோ

ருக்கு அது மிகவும் பிடித்து போனது.மகளை அவனுக்கு கட்டி கொடுக்க தயாராக இருந்தார்கள்.

ஆனால் அந்த பெண்ணோ,நானே கருப்பு,இனியொரு கருப்பை கட்டி கொண்டால் பிறக்கும் குழந்தை அதை விட கருப்பாக பிறக்கும் என்று சொல்லி மறுத்து விட்டாள் 

செழியன் வேறு பெண் பார்க்கலாம் என்று அங்கு இருந்து வந்து விட்டான்.

சில மாதங்கள் கழித்து செழியன் ஒரு கருத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.திருமணம் நடந்த அதே கோவிலில்,இவனை கருப்பு என்று சொல்லி மறுத்த,

அந்த பெண்ணுக்கும் ஒரு சிவப்

பான பையனுக்கும் திருமணம் நடந்தது.

ஒரு வருடம் கழித்து செழியன் மனைவியும்,அந்த கருத்த பெண்ணும் பிரசவத்திற்கு ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்

பட்டார்கள்.

செழியன் மனைவிக்கு பிறந்த குழந்தை மானிறத்திலும்,அந்த பெண்ணுக்கு அண்ட கருப்பு நிறத்திலும் குழந்தை பிறந்தது.

நிறம் இறைவன் படைப்பு என்பதை செழியன் புரிந்து இருந்தான்.அந்த பெண்ணுக்கு புரியவில்லை.

முற்றும்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract