STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

கோடை

கோடை

2 mins
409


கோடை.

கோடைகால வெயில் சுட்டெரித்து கொண்டு இருந்தது.தலையில் சுமையுடன் கூட வயிற்றில் ஏழு மாத குழந்தை.அதை காப்பாற்றி பெற்று எடுக்க தான் தலையில் சுமையுடன் பஸ்சை விட்டு இறங்கி கிராமத்து சாலையில் தன் வீட்டை நோக்கி

மலர் நடந்து கொண்டு இருந்தாள்.

மூன்று மாதம் முன்பு தான் இவளுடைய கணவன்,கிராமத்திற்குள் விவசாய நிலத்திற்குள் புகுந்த யானையை விரட்ட போக ,அது திரும்பி இவனை துரத்த ,ஒரு கட்டத்தில் அது தன் தும்பிக்கையால் வளைத்து பிடித்து தூக்கி வீச,தலையில் அடிபட்டு அங்கேயே உயிர் போய் விட்டது.

அரசாங்கம் அவளுக்கு ஏதோ இழப்பீடு கொடுக்கும் என்று சொல்லி கொண்டு இருந்தார்கள்.

தினமும் அதை பற்றி கேட்க தான் பக்கத்து ஊரில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு நடந்து கொண்டு இருந்தாள்.

அந்த கிராமம் மலை அடிவாரத்தில் இருந்தது.கிராமத்து எல்லையில் ஒரு வாய்க்கால் ஓடி கொண்டு இருந்தது.அதில் தண்ணீர் வற்றாமல் இருந்து கொண்டு இருக்கும்.

அது பிரதான சாலையை ஒட்டி இருந்தது.

கோடை காலம் தொடங்கி விட்டது.இனி மலையில் உள்ள காட்டில் இருந்து மிருகங்கள் யானைகள் இரவு ஆனால் தண்ணீரை தேடி வர தொடங்கும்.

வழி தெரியாத யானைகள் பகல் நேரத்தில் சோழ காட்டில் உள்ள பயிரை சாப்பிட்டு அழித்து விட்டு,தண்ணீரை தேடி பிரதான சாலைக்கு வந்து விடும்.

அப்படி வந்த யானையை விரட்டி தான் மலரின் புருஷன் இறந்து போனான்.

திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகவில்லை.அதற்குள் விதி அவள் வாழ்க்கையில் விளையாடி விட்டது.


அப்படியும் இப்படியும் நடந்து இழப்பீடு பணம் மூன்று லட்சம் கைக்கு வந்தது.

மலர் புருஷனுக்கு மலை அடிவாரத்தில் ஒட்டி கொஞ்சம் பூமி இருந்தது.

அவனுக்கு ரொம்ப நாளாக அதில் ஒரு கிணறு தோண்ட ஆசை.விவசாயத்திற்கு போக,கோடை வரும் போது அங்கு ஒரு தொட்டி கட்டி,தண்ணீர் சேமித்து,

மிருகங்கள் நீர் அருந்த வசதி செய்ய நினைத்து இருந்தான்.

அப்பவாவது யானைகள் ஊருக்குள் வராமல் இருக்கும் என்று நினைத்து இருந்தான்.

அவன் இறந்து இழப்பீடாக வந்த பணத்தில் அவனுடைய ஆசையை நிறைவேற்ற நினைத்தாள்.

ஒரு உறவினரை பிடித்து,ஒரு ஆழ்துளை கிணறு தோண்ட ஏற்பாடு செய்தாள்.கூடவே ஒரு பெரிய தொட்டியும் நிலத்தில் கட்டி முடித்தாள்.

நடையாக நடந்து மின் இணைப்பு வாங்கி,கோடை ஆரம்பிக்கும் போது நீரை நிரப்பி வைத்தாள்.

இப்போது மிருகங்களும் யானைகளும் கிராமத்தின் உள்ளே வருவது நின்று விட்டது.

மக்கள் நிம்மதியாக பெரு மூச்சு விட்டார்கள்.


பிறக்கும் குழந்தைக்கு யானையிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று நினைத்து இந்த ஏற்பாட்டை அவசரமாக செய்து முடித்தாள்.

அந்த கிராமத்தில் இருப்பவர்கள் அனைத்து பேரும்,வசதியில் குறைந்தவர்கள் தான்.

இப்போது அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.

முன்னாடி யானை வந்து விடும் என்ற பயத்தில் எந்த மோட்டார் வாகனமும் வராமல் இருந்தது.குறிப்பாக 108 போன்ற வாகனங்கள் அச்சம் இன்றி வர,மலர் தோண்டிய கிணறு உதவியது.


Rate this content
Log in

Similar tamil story from Abstract