கனவு உலகம்
கனவு உலகம்
என் வாழ்வின் மிக முக்கியமான தருணம் இன்று. அம்மாம், நான் என் சிறுவயது கனவை நினைவாக்கும் தினம்.
முதன்முதலாக நான் விண்கலத்திற்கு சொல்லுகிறேன். இன்று நாள் பன்னிரண்டு, இரண்டாயிரத்து ஏழுபத்துஐந்து, திங்கள்ட் கிழமை. சரியாக, மணி பதினொன்றுக்கு விண் கப்பல் புறப்பட போகிறது. நான் மேற்கொண்ட ஐந்து வருட பயிற்சி, எனது வாழ்நாள் கனவு,என் குடும்பத்தின் நம்பிக்கை மற்றும் எனது ஆசிரியர்கள் உயர் அதிகாரிகள் அனைவரின் நல் அசிவுடன் நானும் என் குழுவும் புறப்பட தயாராக உள்ளோம்.
பிரபா, நீ தயாரா? என பின் வரிசையில் அமர்ந்திருந்த அருண் என்னை கேட்டான். ம்ம்ம் நான் தயார், அபி, கோபி, முரளி, லதா தயாரா என நான் கேட்பதற்குள், நாங்கள் அனைவரும் தயாராக உள்ளோம் கேப்டன் என்றனர். நின்னும் இரண்டு மணி நேரம் தான் விண்வெளியில் நாம் கால் பதிக்கும் தருணம் என எண்ணியபடி அனைவரும் விரைந்து சென்றோம். விண்கப்பலில் அனைவரும் தங்கள் இருக்கையில் அமர்ந்தோம். இன்னும் பத்து நிமிடங்கள் என ஏவல் கணிப்பு துடங்கியது.
என் மனம் முப்பது வருட ஏன் வாழ்க்கையை புரட்டிப்போட்டது ஏன் கண்முன். அக்கணம் என் காதல் கணவன் யுவாவை நினைத்தேன் இப்பொழுது அவர் மருத்துவமனையில் அவரின் மருத்துவ சேவையை செய்தபடியே இருப்பார். என்னை விட நான் விண்ணுக்கு பயணம் செய்வது அவருக்கு மகிழ்ச்சி மற்றும் பெருமை.
இன்னும் பத்து வினாடிகள், ஒன்பது வினாடிகள்,.....இரண்டு வினாடிகள். விண்கப்பல் பி வி ஏ-415, புறப்பட்டது. விண்வெளியை அடைய இன்னும் இருவது நிமிடங்கள்.
"பிரபா , மற்றும் குழு தங்கள் வேலையை சரியாக செய்தால் அந்த "உழவோம் செயற்கைக்கோளை" நாம் மீட்டுவிட முடியும் " என உயர்மட்ட குழு தலைவர் திரு. அசோக் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
பி வி ஏ-415 விண்ணை அடைந்தது. இன்னும் இரண்டு தினங்களில் உழவோம் செயற்கைக்கோளை, சரி செய்து நாம் பூமிக்கு திரும்ப வேண்டும் என என் குழுவிடம் நான் கூறினேன்.
செய்வாய்க்கிழமை , பூமியில் இரவு எட்டு மணி, " இன்று, பிரபா தலைமையிலான எங்கள் குழு வெற்றிகரமாக செயற்கைக்கோளை பழுது பார்த்து சரி செய்தவிட்டார்கள். நாம் அடைந்த வெற்றி இது நம் அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்கும் பரிசு ", என செய்ய்தியாளர்கள் சந்திப்பில் தலைவர் திரு. அசோக் உரையாற்றினார்.
புதன் கிழமை," பி வி ஏ-415 மாலை நான்கு மணி அளவில் பூமியை வெற்றிகரமாக வந்தடைந்தது", என்ற செய்ய்தியை தொலைக்காட்சியில் பார்த்தபடி பிரபாவின் வருகைக்காக காத்திருந்தார், மருத்துவர்.யுவா ..