கனவே கலைந்து விடு
கனவே கலைந்து விடு
அதிகாலை நேரம்.படுக்கையில் புரண்டு படுத்த
ரோஹினி சற்று முன்பு கண்ட கனவை மீண்டும்
நினைத்து பார்த்தாள்.அதிகாலை கண்ட கனவு பலிக்கும் என்று சொல்வார்கள்.ஆனால் அவளுக்கு வந்த கனவு பலிக்காமல் இருப்பதே நல்லது.
ரோஹினி யின் கணவர்,ராணுவத்தில் பணி புரிகிறார்.ஆண்டுக்கு ஒரு தடவை ஒரு வார விடுப்பில் வந்து செல்வார்.சில தடவைகளில்,அது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று கூட
ஆகி விடும்.
திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகி விட்டது.
பதவி உயர்வு இதோ கிடைத்து விடும்,கிடைத்து விட்டால், குடும்பத்தை கொண்டு செல்ல சலுகை கிடைக்கும், என்று சொல்லியே நான்கு ஆண்டுகள்
ஓடி விட்டது.
இன்னும் குழந்தை இல்லை.அதற்காக அவள் வருந்தவும் இல்லை.அவளுக்கு நேரம் போக வேண்டும் என்பதற்கு பக்கத்தில் உள்ள பள்ளிக்கு
ஆசிரியர். ஆக சென்று கொண்டு இருக்கிறாள்.
அப்படி போய் கொண்டு இருக்கும் வேளையில்
ஒரு நாள் பள்ளியில் கூட படித்த மாணவன் சுந்தர்
அந்த பள்ளிக்கு உடற்பயிற்சி ஆசிரியர் வேலைக்கு
வந்து சேர்ந்தான்.
பள்ளியில் படிக்கும் போதே அவனை நண்பன் ஆக்க நிறைய பெண்கள் விரும்புவார்கள்.ஆனால் ரோஹினி தன்னுடைய குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு சற்று விலகியே இருப்பாள்
சுந்தர் பணிக்கு வந்ததும்,ரோஹினி நன்கு அறிமுகம் ஆனவள் என்று ஏதாவது சந்தேகம்
கேட்டுக்கொண்டு அவளை சந்திக்க வந்து விடுவான்.
கணவன் ராணுவத்தில் இருக்கிறார் என்று தெரிந்ததும் அவனுடைய போக்கில் சில மாற்றங்கள்.அவளை சந்திக்கும் போது எதேச்சையாக நடந்தது போல தொட்டு பேசுவான்.
ரோஹினி இது ஒன்றும் இந்த காலத்தில் தவறு இல்லை என்று நினைத்து அதை சட்டை செய்யவில்லை.
சாயங்காலம் பள்ளி முடிந்ததும்,அவன் பைக் வைத்து இருப்பதால்,அவளை வீட்டில் கொண்டு சென்று விடட்டுமா என்று அடிக்கடி கேட்டு வந்தான்.
ஒரு தடவை உன் வீட்டிற்கு ஒரு தடவை கூட,வா
என்று சொல்ல மாட்டாயா என்று கேட்டு விட்டான்.
அவனுடைய அணுகுமுறை,அவளுக்கு பாதுகாப்பாக தெரியவில்லை.மேலும் அவள் யாரையும் வீட்டிற்கு அழைத்தது இல்லை.
அவளுடன் மாமியார் துணைக்கு தங்கி இருக்கிறார்.என்னவோ அவள் மனதில் வீட்டிற்கு யாரும் வரவும் வேண்டாம்,தானும் யார் வீட்டுக்கும்
போகவும் வேண்டாம் என்று,அதை கடை பிடித்து வந்தாள்.திருமண வயதில் யாருமே தன்னை திருமணம் செய்து கொள்ள தயங்கிய போது
அவள் கணவன் தான் எல்லா செலவும் செய்து
கல்யாணம் செய்து கொண்டான்.அவனுடைய வயதான அம்மாவுக்கு துணை வேண்டும் என்பது தான் அப்போதைக்கு அவனுடைய தேவை.
திருமணத்திற்கு பிறகு தான்,இவளை போல ஒரு மனைவி தனக்கு கிடைத்தது பெரிய பாக்கியம் என்று உணர்ந்தான்.அவள் தன்னை அப்படி அந்த குடும்பத்திற்கு அர்பணித்து இருந்தாள்.
இப்படி இருக்கும் போது சுந்தரின் அறிமுகம் அவளை சற்று தடுமாற வைத்தாலும்,அற்ப சுகத்திற்கு அடிமை ஆகி விட கூடாது என்று தடுமாறிய மனதை ஒரு நிலை படுத்தி கொண்டாள்.
அன்று அவள் கண்ட கனவு, சுந்தருடன் படுக்கையில் இருப்பதை திடீரென்று விடுமுறையில் வந்த கணவன் பார்த்து விட்டு கையில் இருந்த இராணுவ துப்படக்கியில் தன்னை சுட்டு விட்டு அவனும் சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.பதட்டத்துடன் கண் விழித்து
பார்த்த போது தான் அது கனவு என்று தெரிந்தது.
காலையில் குளித்து கடவுளை கும்பிட்டு நேராக பள்ளிக்கு சென்று, தலைமை ஆசிரியரை பார்த்து
தன்னுடைய ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டு வீடு வந்து சேர்ந்தாள்.
அன்று இரவு பேசிய கணவன் காரணம் கேட்க,அத்தைக்கு முடிவது இல்லை.கூட இருக்க வேண்டும் என்று ஒரு வார்த்தையில் முடித்து கொண்டாள்.
முற்றும்
