கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 36
கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 36
கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 36
" உன்னை பார்க்காமல் காதலித்திருந்தால்..
உன்னைப் போல் பார்த்தும் பார்க்காமல் சென்றிருப்பேன்..
கைப்பேசியில் தவறிய அழைப்பில் காதலித்திருந்தால்
கைகழுவி காதலை தவிர்த்து இருப்பேன்..
கண்டதும் காதலித்திருந்தால்
கண்டு கொள்ளாமல் இருந்திருப்பேன்..
முகநூல் மூலம் காதலித்திருந்தால்
முகவரியை கூட தேடியிருக்க மாட்டேன்..
உள்ளம் அறிந்து காதலித்ததால்
உன்னை சுற்றியே வருகிறேன்..
முகம் பார்த்து காதலித்தால்
முகமது கஜினியாக உன் மனம் வெல்ல படையெடுக்கிறேன்...
காதலுக்கு தடைகள் வரலாம்
காதலர்க்குள் உடையது இருக்க வேண்டும் தன்னம்பிக்கை ..
முயற்சிகள் வடையாக போனாலும்
தளர்ச்சி அடைய மாட்டேன்..
உன்னை மனைவியாக அடையும் வரை..."
இப்படிக்கு
உன் மணவாளன்
கெளதம்.
"பார்வையில் பார்த்தான் திரிஷா பாரா முகம் காட்டினால் ..
அழைத்து பார்த்தான் திரிஷா வளைந்து கொடுக்கவில்லை..
தட்டிப் பார்த்தான் திரிஷா முகம் மொட்டாக மலரவில்லை ..
பேசிப் பார்த்தான் திரிஷா மசியவில்லை..
காதல் கடிதம்
எழுதி பார்க்கிறான்
கை கூடுமா காதல்...
மூன்றாவது நாள் அதே பேருந்தில் அதே இருக்கையில் இருந்தனர்.. பேருந்தில் ஏறியவன் மற்ற பயணிகளை இடித்து தள்ளி முன்னேறி.. திரிஷாவின் பக்கம் வந்தான்..
திரிஷா என்று பலமான குரலில் அழைத்தான்.. கெளதம்,
ஆளில்லா பரிசல் போல் கவிந்தவள் தலை நிமிரவில்லை .. திரிஷா
அவளது..
தோளில் சிறிதாக தட்டி திரிஷா என்று அழைத்தான்...
தாழ்ப்பாள் மாட்டிய கதவுகள் போல் அசைவின்றி இருந்தாள்..
அவளின்..
தோளை உலுக்கி திரிஷா என்றான்..
நாயின் வால் போல் சுருண்டவள் நிமிரவில்லை..
பின் பக்கம் நின்றிருந்த ஒருவன் கெளதம் சட்டையின் பின் பக்கத்தை இழுக்க பதறியவன்.. காதல் கடிதம் கை நழுவி...திரிஷா தோழியின் மடியில் விழுந்தது.. எடுத்து படித்தவள் இவன் லவ் லெட்டர் கொடுக்கான் என்று கத்தினாள்....உடனே அவனை சுற்றி உள்ளவர்கள் அடிக்க தயாரானார்கள், அப்போது அவனது ஊர்க்காரன் ராசு டே விடுங்கடா அவனை என்று சுற்றி நின்று அடிக்க பாய்ந்தவர்களை தடுத்து... அந்த பொண்ணு இவன் தாலி கட்டின wife .. என்ற பொய்யை அவிழ்த்து விட்டு பேருந்தில் நடக்கவிருந்த கைகலப்பை தடுக்க பேருந்து அமைதியானது..
சிலர் சில பேர் சொல்லி திருந்துவாங்க.. சிலபேர் கொட்டினா திருந்துவாங்க.. சிலபேர் பட்டு திருந்துவாங்க..திருந்தாமா வாழ்ந்த இருந்துதான் என்ன பிரயோஜனம்.. என்று கெளதமை பார்த்து ராசு கேட்டான்..
திரிஷாவுக்கு இது மிகப்பெரிய அவமானமாக இருந்ததோ என்னவோ அவள்.. விம்மி அழுது கொண்டு இருந்தாள்... தோழி சமதானப் படுத்தி கொண்டிருந்தாள்..
எப்படி காதலை மறந்தாள், ஏன் இப்படி பார்க்கக் கூட மறுக்கிறாள் ?
திரிஷா இந்த அளவுக்கு வெறுக்க காரணம்.. என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவை மாற்றுவதாக இல்லை... என்ற முடிவுக்கு வந்தான்..
கல்லூரி நிறுத்தம் வந்தது... பேருந்தில் இருந்த அனைவர் பார்வையும் இருவர் மீதே இருந்தது.. அவர்களின் காதல் ரியாக்ஷன் என்னவென்று அறிந்து கொள்ள.. திரிஷா இயல்பாக பேருந்தை விட்டு இறங்கினாள்.. இப்போது கெளதம் அவமானத்தில் தலை குனிந்திருந்தான்..தோழி நிவேதிதா இவனை முறைத்து பார்த்தபடியே இறங்கினாள்..
நான்காம் நாள் கல்லூரி வாசலில்.. திரிஷாவை இடை மறித்து ....
....தொடரும்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்..

