கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 34
கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 34
கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 34
" ஏதோ ஒரு சூழ்நிலையில் காதலர்கள் பிரிந்து இருவரும் வெவ்வேறு துருவங்களில் சென்றாலும், சந்திக்கும் சூழ்நிலையில் காந்தத்தின் வெவ்வேறு துருவங்கள் ஈர்ப்பது போல் ஈர்த்து இணைக்கக்தான் செய்கிறது காதல் "
" காதல் ஒரு சிலருக்கு உதிர்ந்த பூ போல் மீண்டும் ஒட்டாது, சிலரது காதல் தண்டவாளம் போல் நீண்டகாலம் சென்றாலும்.. ஒருபோதும் தண்டவாளம் போல் இணையானது, சிலரது காதல் இரு துருவங்களாக பிரிந்தாலும் காந்தம் போல் காதலின் ஈர்ப்பு மீண்டும் இணைத்து விடும்.. "
சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் கெளதம், திரிஷா காதலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது...
கெளதம் காதலி திரிஷாவை பார்க்க முயன்றாலோ , சந்திக்கவோ, பேசினாலோ, இடையூறு செய்தாலோ காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற காவல்துறையினர் உத்தரவு காரணமாக.. அவனது பெற்றோர்கள் திருப்பூரில் ஒன்றுவிட்ட பெரியம்மா மகளின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்...
இனிமேல் கெளதமை பார்த்தாலே பேசினாலோ அவன் தலையை கொய்து விடுவேன் என்று திரிஷாவிடம் காரசாரமாக கமல் கூற .. திரிஷா அவனை மறந்து விட்டேன் அவனை ஒன்னும் செய்து விட வேண்டாம் என்று கிருஷ்ணர் போட்டா முன் சூடம் பொருத்தி சத்தியம் செய்தாள்..
கெளதமுக்கு திருப்பூரில் பிரபலமான saran multy speciality hospital யில் வேலை கிடைக்க பணியில் அமர்ந்தான்
திரிஷா மீண்டும் கல்லூரி படிப்பை தொடர்ந்தாள்..
கெளதம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிவகாசியில் பிரபலமான சுதா மருத்துவமனையில் பணியில் சேர்ந்து தினமும் அரசு புறநகர் பேருந்து மூலம் சென்று வந்து கொண்டிருந்தான்..
திரிஷா இளநிலை கல்வியை முடித்து ,ஏழை எளிய கிராமப் புறங்களில் உள்ள மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தி செவல்பட்டி என்ற கிராமத்தில் உயர்ந்து நிற்கும் கல்வி நிறுவனம்,PSR கல்வியில் கல்லூரியில் B.Ed படித்து கொண்டிருந்தாள்..
வழக்கம் போல் கல்லூரி செல்ல சங்கரன்கோவிலிருந்து காலை 8.15 மணிக்கு சிவகாசி செல்லும் அரசு புறநகர் பேருந்தின் பின் வாசலிலிருந்து முன் இரண்டாவது சீட்டில் ஜன்னலோரத்தில் திரிஷாவும் அருகில் தோழி நிவேதிதவும் வழக்கமாக கல்லூரிக்கு பயணிப்பவர்கள்.அப்படி பயணித்த அன்று...
பேருந்து கரிசல்குளம் வந்த போது சிவகாசி செல்ல அதே பேருந்தில் பின் பக்கம் ஏற கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தான்.. திரிஷா கெளதமை பார்த்ததும் பேருந்து ஜன்னல் கண்ணாடியை இழுத்து அடைத்தாள் , பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்கும் போதெல்லாம் தலையை குனிந்து கொண்டாள்..
இப்போது பேருந்து கல்லூரியை நெருங்கிய போது முகத்தை துப்பட்டாவால் மறைத்த படி இறங்கிய திரிஷாவின் கண்களை ஏதேச்சையாக பார்த்தான் கெளதம்.. பார்த்தவுடன் அவனது இதயம் 💓 படபடத்தது..இரு ஆண்டுகளாக பார்க்க துடித்த அதே காதல் விழிகள்..
அவள் பெயர் சொல்லி அழைக்கலாமா? என்று எண்ணிக் கொண்டு இருந்த போது பேருந்து கிளம்பியது.. அவள் திரும்பி ஒரு தடவை பார்க்க மாட்டாளா என்று ஏங்கியவனுக்கு ஏமாற்றத்தை அவள் தந்தாள், அவள் மறையும் வரை அவன் அவளை கண்ட வரை திரிஷா திரும்பி பார்க்கவில்லை.. பார்க்காதது ஏனோ புரியாத புதிராக இருந்தது.. அவள் மறந்து இருப்பாளோ ? , வாய்ப்பில்லை.. மறந்தால் முகத்தை மறைப்பாளோ .. கேள்வி மேல் கேள்வி எழவே .. வேள்வியில் விழுந்த மரக் குச்சிகளாக உள்ளம் எரியத் தொடங்கியது ...
மறுநாள் அதே நேரம் அதே பேருந்து அதே இருக்கையில் திரிஷா.. பக்கத்தில் நின்றபடி கெளதம்..
நடந்தது என்ன...?
..... தொடரும்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்.

