Raj Packia

Romance

4  

Raj Packia

Romance

கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 33

கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 33

2 mins
11


கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 33

" பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு ஒன்று இருக்கும்.. அதற்கு இடையில் காதலும் இருக்கும்..பிறப்பை ஏற்றுக் கொள்ளும் நீங்கள்,இறப்பை ஏற்றுக் கொள்ளும் நீங்கள்,காதலை ஏற்றுக் கொள்ள தயங்குவது ஏன்?.. பிறப்பு, காதல், இறப்பு ஒரு இயற்கை..

"இந்த குழந்தை தான் எனக்கு பிறக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க முடியாத மனிதர்கள், இப்படித்தான் இறப்பேன் என்று முடிவெடுக்க முடியாத மனிதர்கள், மனிதனால் தனக்கு துணையை இவர்யென முடிவெடுக்க முடியும் காதலை மறுப்பது ஏன்?.." என்று நீதிபதி திரிஷா வின் தந்தையைப் பார்த்து கேட்டார்..

 உள்ளூர் காவல் நிலையத்தில் காதலர்களை ஆஜராக உத்தரவிட்டு நல்லதோர் முடிவினை காவல்துறை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்..

தகப்பனார் வயிற்றில் தாக்கியதால் வலி தாங்க முடியாத திரிஷா,வீட்டை விட்டு வெளியேறி கெளதமிடம் தஞ்சம் புகுந்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளார், ஆகையால் திரிஷாவை யாரும் கடத்தவில்லை என்று.. நீதிபதி தீர்ப்பு வழங்கினர்..

சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் கெளதம், திரிஷா ஆகியோர் ஆஜராகினர்..

SP அன்பழகன் காவல் நிலையத்தில் நுழைய காவல்துறையினர் அனைவரும் எழுந்து நின்று சல்யூட் அடிக்க அதை வாங்கி பதிலுக்கு தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மையாக வந்தவர், கெளதம் அங்குள்ள நாற்காலில் இருந்ததை கண்டவுடன் வில்லன் பொன்னம்பலமாக மாறினார்..

" டேய் ங்.... என்ற படி கெளதமின் சட்டையை பிடித்து நீ என்ன மாமியார் வீட்டுக்கு வந்தவனைப் போல் நாற்காலி போட்டு உட்கார்ந்த்திருக்க என்று சொல்லி கன்னம் பழுக்க ஒரு அடி கொடுத்து (எழுத்தில் எழுத முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார் SP)

ஓடோடி வந்த கெளதமின் வழக்கறிஞர் கமலக்கண்ணன் வணக்கம் சார்!, இது very very to much சார்...ஒரு அரசு அதிகாரி இப்படியா அசிங்கமாகப் பேசுவது... என்று சொல்ல.. மெளனமாக தன் இருக்கையை நோக்கி நகர்ந்தார்...

திரிஷாவிடம் வழக்கறிஞர் கமலக்கண்ணன்.. திரிஷா பள்ளி சான்றிதழ், குடும்ப அட்டை,மாற்று சான்றிதழ் போன்ற வற்றில் உன்னுடைய வயதை குறைத்து மைனர் பெண்ணாக நிருபித்து உள்ளார் உன் அப்பா..நீ காதலனுடன் செல்வதாக முடிவெடுத்தால்..நீ மைனர் பெண் என்பதால் காதலனுடன் அனுப்ப சட்டத்தில் அனுமதி இல்லை.. உன்னை அரசு காப்பகத்திற்கு தான் அனுப்பி வைப்பார்கள்.. ஆகையால் என் அப்பாவுடன் செல்கிறேன் என்று சொல்வதுதான் உனக்கு பாதுகாப்பு என்று பயமுறுத்த , திரிஷாவும் அப்படியே வாக்கு மூலமும் எழுத்து மூலமும் எழுதி கொடுத்தாள்..SP யிடம்

மைனர் பெண்ணை கடத்திச் சென்று வற்புறுத்தி திருமணம் செய்ததாக FIR போட்டு.. உன்னை சிறையில் தள்ளிருவாங்க.. அடுத்து அரசு வேலைகளில் சேர முடியாது,வெளிநாடு போக முடியாது.. அப்பெண்ணை வேண்டாம் என்று சொன்னால்.இது வரை தொடரப்பட்ட வழக்குகள் எல்லாத்தையும் திரும்ப பெற்று விடுவார்கள்.. என்று மிரட்டினார்.. வழக்கறிஞர் கமலக்கண்ணன் கெளதமை 

வழக்கறிஞர் கமலக்கண்ணன் கமலிடம் விலை போன காரணத்தால், காதலர்களை மிரட்டி சொல்லிக் கொடுத்த வசனத்தை அப்படியே SP யிடம் சொல்ல வற்புறுத்தியதால் அந்தப் பெண் வேண்டாம் என்றும் அந்த பெண்ணுடன் எந்த விதமான பேச்சோ உறவோ வைத்து கொள்ள மாட்டேன் மீறினால் காவல்துறை நடவடிக்கை எடுக்க உறுதியளிக்கிறேன் என்று SP யிடம் எழுதி கொடுத்து கண்ணீரோடு வெளியே வந்தவன்..

தனது ஆசை நாயகி..எத்திசை போனாள் என்று தேடினான்.. காதல் வசந்தம் காணாது வாடினான் ,மனதை திருடியவள் மறைந்த மாயமென்ன , துள்ளாத இதயம் 💓 துள்ள.. வழக்கறிஞர் கமலக்கண்ணனிடம் ஓடி வந்தான்.. அவரது காலில் விழுந்து ஒரே ஒரு முறை அவளை பார்க்க அனுமதி கொடுங்கள் என்று கத்தினான்..இதை அங்கு நின்றிருந்த அனைவரும் பார்க்க அவர்கள் கண்ணிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.. கெளதம்... ,திரிஷாவை அவளது அப்பா அழைத்து கொண்டு சென்று விட்டார், இனிமேல் அவளை பார்க்க இயலாது.. என்றவுடன்.. மயங்கி சரிந்தான்..

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அதே பேருந்தில் சந்தித்தனர் கெளதமும் திரிஷாவும்..

சந்திப்பு... ... தொடரும்

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

மேலக்கலங்கல்

தென்காசி மாவட்டம்.


Rate this content
Log in

Similar tamil story from Romance