கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 31
கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 31
கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 31
" திருமண பந்தத்தில் இணையும் துணையை பெற்றோர் தேர்ந்தெடுக்கும் நபர்க்கு இல்லாத சிறப்பு.. மதம்,சாதி மாறி காதலிக்கும் நபர்க்கு என்ன சிறப்பு இருக்கிறது?,ம்ம்..ஒரு மயி..ம் இல்லை" என்று வாகன ஓட்டுனர், காதலர்களை பார்த்து தன் கோபத்தை காட்டியபடி சாலையோர கோவில் முன்பு வாகனத்தை நிறுத்தினான்..
இரண்டு பேரும் காரை விட்டு இறங்கி கோவிலுக்குள் மறைந்து கொள்ளுங்கள் ,சிறிது நேரத்தில் வேறு கார் ஒன்றை அனுப்புகிறேன் அதில் வாங்க..என்று ஓட்டுனர் கூறியவுடன் காதல் புறாக்கள் கூட்டை விட்டு பறப்பது போல் காதலர்கள் வாகனத்தை விட்டு இறங்க.. வாகனம் மின்னல் வேகத்தில் செல்ல..அதே வேகத்தில் காதலர்களும் கோவிலுக்குள் சென்றனர்...
காதலர்கள் வந்த வாகனத்தை பின் தொடர்ந்து வந்த திரிஷாவின் அப்பாவின் கூலிப்படை வாகனமும் அந்த கார் பின்னால் விரைந்து சென்றது...
காதலர்கள் வந்த வாகனத்தை பின்தொடர்ந்து வந்த வாகனத்தை கவனித்த ஓட்டுனர், காதலர்களை எப்படியும் காப்பாற்ற வேண்டுமென்று முடிவு எடுக்க.. வாகனத்தை வேகமாக செலுத்தி கன நேரத்தில் தேனி பாய்ன்ட் ரோட்டை தொட்டவுடன் அங்குள்ள அருள்மிகு மெய்கண்ட.இரட்டை வினாயகர் திருக்கோயிலில் காதலர்களை இறக்கி விட்டுவிட்டு சென்று கொண்டிருந்த காரை , கமலின் கூலி ஆட்கள் வந்த கார் பின் தொடர,
வடுகப்பட்டி வந்தவுடன் கார் திருமங்கலம் சாலையில் திரும்பிய போது, பின் தொடர்ந்த கூலிப்படையினர் முன் செல்லும் காரில் காதலர்கள் தென்படாததை கண்டவுடன் வடுகப்பட்டியிலே நின்று கொண்டனர்..
காதலர்களை வரவழைத்த மாற்று வாகனம் மதுரையை நோக்கி வடுகப்பட்டி வந்த அதே நேரத்தில் , காதலர்கள் முதலில் வந்த வாகனமும் தேனியை நோக்கி வடுகப்பட்டி உள்ளே வர , அந்த வாகனத்தை கூலிப்படை கவனிக்க,காதலர்கள் வந்த வாகனத்தை கவனிக்க தவறவே,காதலர்கள் வந்த வாகனம் அவர்களை கடந்து மின்னல் வேகத்தில் பறந்தது.
பின்தொடரும் வாகனத்தை திசை திருப்பி காதலர்கள் பாதுகாப்புடன் மதுரை கொண்டு செல்ல முடியும் என்ற திட்டத்தினை மிக நேர்த்தியாக நிகழ்த்தி விட்டார் ஓட்டுனர்..
திருமங்கலம் வந்த காதலர்களின் வாகனம் ஓய்வு பெற்ற SP வீட்டின் முன்பு நிற்க.. ஊர் நாட்டாமை குருசாமி கெளதமை மட்டும் தனியாக அழைத்து.. நாளைக்கு உங்களை பிரித்து வைக்கத்தான் முடிவெடுத்து இருக்காங்க , இன்றைக்கு உன்னையும் அந்த பொண்ணையும் தனியாக ஒரு அறையில் தங்க வைக்கேன் ,நீ அவளை முடிந்த வரை நல்லா என்ஜாய் பண்ணிக்கோ என்று இரக்கமற்ற மிருகம் போல் கூறினான்.. இதைக் கேட்ட கெளதமுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியிருந்த நிலையில்..
காதலர்கள் பிரிந்தார்களா ..? இல்லை இணைந்தார்களா..?..
.....தொடரும்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்

