கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 20
கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 20
கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 20 "பொன்னை உருக்கி வார்த்தால் தான் பளபளப்பாக மின்னும்"..அதுபோல "பெண் பிள்ளைகளை உருத்தாக(அன்பு) வளர்த்தால் தான் அந்த பெண்ணின் நற்குணங்கள் மிளிரும்.." குடும்பத்தாருடன் நட்பாகப் பழகிய கெளதம் தன் மகள் திரிஷாவை காதலிப்பது தெரியவர .. திரிஷா நீ தேர்ந்தெடுத்த வருங்கால Life Partner ஒரு தவறான நபர் என்றார் கமல். அந்த தவறான நபர்தான் ஆயிரம் பேர் மத்தியில் ஒருவன் எனக்கு லவ் லெட்டர் கொடுக்க வந்தவனை தட்டிக் கேட்டான்.அந்த தவறான நபர்தான் தங்கச்சி நீராட்டு விழா Functionயை ஒரே ஆளாக முன்நின்று சிறப்பாக செய்தான்..அந்த தவறான நபரைத் தான் உங்கள் சுயநலத்திற்காக வீட்டுக்குள் விட்டு என் மகன் போலன்னு சொன்னீங்க.. என்று கோபமாக கத்தினாள் திரிஷா.. Yes ,மகனாக நினைத்துதான் வீட்டுக்குள் விட்டோம்..மருமகனாக மாற நினைக்கிற துரோகினு முன்னே அறிந்திருந்த வீட்டு படி வாசலில் விட்டிருக்க மாட்டேன். நம்பிக்கையொடு விட்டேன் அவநம்பிக்கையாக்கி அவமானம் படுத்திருச்சு அந்த நாய் , நாயை தூக்கி நடு வீட்டில் வச்சது என் தவறுதான் என்று சூடாக கூறினார் கமல்.. "வீட்டுக்குள் அவனை விட்டது உங்களோடு தவறுனா?..நான் அவனை காதலித்தது சரிதான் " என்றாள், திமிராக திரிஷா.. இதுவரை பொறுமையாக இருந்த கமல்,திரிஷாவின் எல்லை மீறிய பேச்சால் டென்ஷனான கமல்.. கன்னத்தில் ஒரு அடி அடித்தார்.. அடித்த அடியில் சரிந்து கீழே விழுந்தாள் திரிஷா.. பெத்தவங்க பேச்சைக் கேட்காத,நீ ஏன் உயிருடன் இருக்கிறாய்?, செத்து தொலை..!' என்று கூறி திரிஷாவின் வயிற்றில் காலல் எட்டி மிதிக்க வயிற்றை பிடித்தவாறு சுருண்டாள் திரிஷா... சிறிது நேரத்தில் எழுந்தவள்.. அவளின் சித்தி குமுதாவின் வீட்டுக்கு வந்தாள்.. திரிஷாவை பார்த்த குமுதாவும் அவள் வீட்டுக்காரன் சரத்தும் ,ஒரு பெண் பிள்ளையை இப்படிய அடிப்பான் பாவி என்று கூறி வருத்தப் பட,நடந்ததை கேட்டனர், நடந்த விவரத்தை கூறினாள் திரிஷா.. பால்காரன் சரத் திரிஷாவின் அப்பா கமலுக்கு போன் செய்தார்..போனை எடுத்த கமல் hellow என்றார்..கமல் திரிஷா என் வீட்டில்தான் இருக்க எங்கேயும் தேடாத என்றார்.. எக்கேடு கெட்டு எந்த கழுதை எங்கே போனால் எனக்கு என்ன ? என்று கூறி கமல் போனை கட் செய்தார்.. அழுதபடி,சித்தி கெளதமுக்கு போன் போட்டு ஊர்க்கு வரச் சொல்லு என்றாள் திரிஷா..இங்க பார் திரிஷா உங்க அப்பா குணத்துக்கு நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காது,அவனை மறந்துட்டு நல்ல முறையில் படிக்கிற வழியைப் பார் என்றாள் குமுதா.. குமுதாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தால் " அவள் நான் பார்த்த காக்கா வெள்ளை என்பதைப் போல்" அடம் பிடித்தாள் திரிஷா.. உனக்கு நான் சித்தி "கெளதமுடன் உன்னை கூட்டி விட்டால் ஊர் உலகம் என்ன தவறுதலாக பேசாத" என்றாள்.. பக்கத்து வீட்டு மாரி மருமகள் கவிதாவை, மாரி தங்கச்சி அனிதா, கவிதாவை சித்தி மகன் சோலை கூட கூட்டி விட்ட மாதிரியா ,அக்கா மகன் பொஞ்சாதியை அவள் அண்ணுக்கு கூட்டிவிட்ட மானங் கெட்டவளை போலவா கூட்டி விடச் சொல்றேன் .. காதலனுடன் தான் என்னை சேர்த்து வைக்க சொல்றேன் என்றாள் திரிஷா.. சித்தி இப்போது கெளதமுக்கு போன் போடப் போறீயா இல்லையா..நான் எங்கயாவது சாகப் போறேன் என்று திரிஷா கிளம்பினாள்.. கதவை அடைத்து நில்லு ,நீ சாகுவதை விட அவனுடன் உயிர் வாழ்ந்தால் போதும் என்றவள் போனை எடுத்து கெளதமுக்கு போன் செய்தாள் குமுதா.. கெளதமிடம் நடந்தவற்றை கூறி ஊர்க்கு வரச் சொன்னாள்.. கெளதம் ஊர்க்கு வந்தானா ?.. .. தொடரும் சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் மேலக்கலங்கல் தென்காசி மாவட்டம்

