கேளிக்கை பூங்கா.
கேளிக்கை பூங்கா.
கோவையில் ஒரு புறநகர் பகுதி.
அங்கு சிங்கிள் பெட்ரூம் வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்தாள் அருணா.வயது பதிமூன்று.
பள்ளியில் படிப்பில் முதலிடம்.
அது போல விளையாட்டிலும் தீவிர பயிற்சி மேற்கொள்வார்.மேடை பேச்சு,கட்டுரை போட்டு எதுவானாலும் கலந்து கொண்டு
பரிசு வாங்குவது வழக்கம்.
அன்று காலை விடுமுறை நாள்.வீட்டில் இருந்து கொண்டு அன்றைய செய்தி தாளை புரட்டி கொண்டு இருந்தாள்.அதில் அகில இந்திய அளவில் ஒரு கட்டுரை போட்டியும் அதில் வெற்றி பெறுபவர் உலக அளவில் நடத்தும் போட்டியில் கலந்து பரிசு வாங்க வாய்ப்பு இருப்பதாக ஒரு செய்தி இருந்தது.
மீதி விவரம் இணையத்தில் கொடுக்க பட்டு உள்ளது என்று எழுதி இருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு டிஸ்னி லேண்ட் எனும் பொழுது போக்கு பூங்கா பற்றி கட்டுரை எழுதி பரிசும் பெற்று இருந்தாள்.அன்று முதல் பணம் சம்பாதித்து ஒரு தடவை சென்று பார்க்க வேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் இருந்தாள்.
பள்ளிக்கு சென்றதும் வகுப்பு ஆசிரியரிடம் இந்த போட்டியை பற்றிய தகவல் சொல்ல அவரும் பார்த்து விட்டு,உலகளவில் பரிசு பெரும் பத்து குழந்தைகள் டிஸ்னி லாண்ட் சுற்று பயணம் இலவசம்,
நீயும் முயன்று பார்க்கலாம்,என்று கூற,சார் நீங்கள் உதவினால் கலந்து கொள்கிறேன் என்று கூற அவரும் ஒத்து கொண்டார்
எதிர்காலத்தில் எரி பொருள் என்னவாக இருக்கும் என்பது தான் போட்டி.கட்டுரை அளவில் உள்நாட்டில் போட்டி,அதில் வெற்றி பெற்றால்,உலகளவில் நடக்கும் போட்டியில் அதை பற்றி சொற்பொழிவு கொடுக்கவேண்டும்,அதில் 25 பேர் கலந்து கொண்டு வரும் முதல் பத்து பேருக்கு கேளிக்கை பூங்கா பயணம் இலவசம்.
போட்டு தேதியும் வந்தது.கட்டுரை இணையத்தில் ஆங்கிலத்தில்பதிவு செய்ய வேண்டும்.போட்டி முடிவு தேதிக்கு முன்பு பதிவு செய்தாள்.கூடவே மாற்று எரி பொருள் என்னவாக இருக்கும்,அதை எப்படி தயாரிக்க முடியும்,சோதனை ஒட்ட விவரம் என்று ஒரு பட்டியல் இருந்தது.கட்டுரை எழுதி முடித்த கையோடு,அதை ஒரு உரு சக்கர வாகனத்தில் சோதித்து பார்த்து அதை படம் எடுத்து வைத்து கொண்டாள்.
உள்நாட்டு போட்டியில் முதலாவது ஆளாக தேர்ந்து எடுக்க பட்டு உலகளவு போட்டிக்கு அவளது கட்டுரை அனுப்பி வைத்தார்கள்.
ஒரு நாள் காலை நல்ல செய்தி,ஆம்
உலகளவு போட்டிக்கு அவளும் தேர்ந்து எடுக்க பட்டு இருந்தாள்.
கொரோனா காரணம் இணைய வசதி மூலம் பங்கு பெற்றால் போதும் என்றும்,அவள் கலந்து கொள்ள வேண்டிய நேரம் தேதி எல்லாம் முன் கூட்டி அவளுக்கு அறிவிக்க பட்டது.
சோதனை ஆய்வு கட்டுரை ஏற்கனவே இணையம் மூலம் அனுப்பி ஆகி விட்டது.
வீட்டில் கணினி இல்லாத காரணம்,பள்ளியில் உள்ள கணினி,
இணையதள இணைப்பு மூலம் அவளுக்கு கொடுக்க பட்ட நாளில் ஆங்கிலத்தில் சிறப்பாக சொற்பொழிவு செய்தாள்.முடிந்ததும்
ஒரே கரகோஷம்.முகத்தை பார்க்க முடியவில்லை.பாராட்டுகளை காது குளிர கேட்டாள்.வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.
சரியாக ஒரு மாதம் கழித்து அவளுக்கு மகிழ்வான செய்தியும் பாராட்டி பத்திரமும் வந்து சேர்ந்தது.
ஆம் அவளுடைய கனவு Disneyland நேரில் கண்டு களிக்க தேர்வு ஆகி இருந்தாள்.கூடவே அவளுக்கு வழிகாட்டிய ஆசிரியரும் அந்நாட்டிற்கு வரலாம் என்று செய்தி வந்தது.
வாழ்நாள் கனவு நிறைவேற போகிறது என்று நினைத்து அன்று முழுவதும் தூங்கவில்லை அருணா.