Vadamalaisamy Lokanathan

Romance

3  

Vadamalaisamy Lokanathan

Romance

காதல்

காதல்

1 min
187


அருணும் நிலாவும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசித்து வந்தனர்.

இருவரும் ஒரே நிறுவனத்தில் பணி செய்து வந்தனர்.ஐந்து வருட பழக்கம்.

அருணுக்கு நிலாவை திருமணம் செய்து கொள்ள ஆசை.அவள் மீது தீராத காதல்.ஒரு நாள் அவளிடம் தன் காதலை சொல்ல,சரி ஒரு வருடம் போகட்டும் திருமணம் பட்டு யோசிப்போம் என்று கூறி இருந்தாள்.

சுமார் ஆறு மாதம் இருவரும் மிக

நெருக்கமாக பழகி சினிமா சுற்று பயணம் என்று மகிழ்ச்சியாக இருந்தார்கள்.அதற்கு பிறகு அவரவர் பெற்றோரிடம் சம்மதம் கேட்டு வாங்கிய பிறகு திருமணத்தை நடத்தலாம் என்று திட்டம் இட்டனர்.இதன் நடுவே இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில்

நிலாவின் கால் முறிந்து,முழஙகால்

வரை காலை எடுக்கும் படி ஆகி விட்டது.இதை பார்த்த அருணின்

பெற்றோர், ஒரு முடமான பெண்ணை திருமணம் செய்ய 

சம்மதிக்க மாட்டோம் என்று கூற

அருணும் வேறு வழியின்றி நிலாவை திருமணம் செய்ய முடியாது என்று நிராகரித்து விட்டான்.நிலா மிகவும் மனம் உடைந்து போய் விட்டாள்.

உயிரை மாய்தது கொள்ளலாம் என்று கூட நினைத்தாள்.

ஆனால் பெற்றோரின் அன்பு

அவளை தடுத்து நிறுத்தியது.


Rate this content
Log in

Similar tamil story from Romance