STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

காதல்

காதல்

5 mins
427

காதல்.

பத்தாவது மாடியில் செயல் இயக்குநர் வருகைக்கு காத்து இருந்தான் கிஷோர்.அவன் ஒரு மார்கெட்டிங் கம்பனியில் விற்பனை பிரிவின் பொது மேலாளர் ஆக பணி புரிந்து வந்தான்.

வெளிநாட்டில் மேலாண்மை பட்டம் படித்து விட்டு,தன்னுடைய தந்தையின் நிறுவனத்தில் செயல் இயக்குநர் ஆக பதவி ஏற்று இருந்தாள் சுகன்யா.இன்று தான் முதன் முதலாக அலுவலகம் வருவதாக கூறி அவளை வரவேற்க ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டு இருந்தது.

அவளை வாழ்த்தி அறிமுகம் செய்து கொள்ள பல பிரிவுகளின் உயர் அதிகாரிகள் அங்கு வந்து காத்து இருந்தனர்.

நல்ல நேரம் பார்த்து சுகன்யா தன் தந்தையின் முன்னிலையில் பொறுப்பு ஏற்க,காத்து இருந்த அத்தனை அதிகாரிகளும் ஒவ்வொருவராக சென்று அவளை வாழ்த்தி விட்டு பூச்செண்டு கொடுத்து விட்டு வெளியில் வந்து கொண்டு இருந்தார்கள்.

ஆனால் கிஷோர் உள்ளே செல்ல இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

காரணம் நடுவே நிர்வாக இயக்குநர் சுந்தர்,அதாவது சுகன்யாவின் தந்தையின் உறவினர்கள் நண்பர்கள் வந்து சுகன்யாவை வாழ்த்தி கொண்டு இருந்தார்கள்.

சுகன்யாவின்தனிசெயலர்,முக்கியத்துவம் அறிந்து நண்பர் உறவினர் என்று உள்ளே அனுப்பி கொண்டு இருந்தார்.


அப்படியும் இப்படியும்,எல்லோரும் வந்து சென்ற பிறகு கிஷோர் உள்ளே செல்ல அனுமதி கிடைக்கும் போது கிட்ட தட்ட களைப்பாகி முகம் வாடி சோர்ந்து போய் விட்டான்.

இதற்கு அவனுக்கு வயது 27 தான் ஆகிறது.

உள்ளே சென்றதும் அவனுக்கு ஆச்சரியம்.இவனை பார்த்ததும் சுகன்யா அவளை அறியாமல் எழுந்து நின்று கிஷோரை வரவேற்றாள். சுந்தரோ என்ன கிஷோர் இவ்வளவு தாமதம் என்று கேட்க,என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஏதோ சொல்ல முயற்சிக்க,சுந்தர் தன் மகளை அறிமுகம் செய்து வைத்து விட்டு மகளிடம்,இவர் தான் நம் வியாபாரத்தின் முதுகெலும்பு.இவர் இல்லாமல் இந்த நிறுவனம் இவ்வளவு வளர்ச்சி கண்டு இருக்காது.கடந்த இரு வருடங்களில் அதாவது இவர் வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்து வளர்ச்சி இரு மடங்கு ஆகி உள்ளது.இவருடன் தான் நீ அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கும் என்று சொன்னார்.அவளும் ஒன்றும் பேசாமல்,தலையை ஆட்டி கொண்டு இருந்தாள்.

அவளுக்கு அவன் ஏற்கனவே அறிமுகம் ஆனவன் தான்.

கல்லூரியில் படிக்கும் போது தன்னை அவன் நேசிப்பதாக சொன்ன போது,தன்னுடைய அந்தஸ்து அவனை ஏற்று கொள்ளாது என்று தட்டி கழித்து விட்டாள்.அப்போது அவன் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தான்.அவள் அப்போது தான் முதலாம் ஆண்டு சேர்ந்து இருந்தாள்.


கல்லூரியில் படிக்கும் போது கிஷோருக்கு அவள் யார் என்று தெரியாது,காதலுக்கு கண் இல்லை அல்லவா,அவளுடைய அறைக்குள் நுழைந்த பிறகு தான்,அவளை ஏற்கனவே பார்த்த முகம் என்று நினைவுக்கு வர,சட்டென்று,அவள் தனக்கு முதலாளி நினைவுக்கு வர,பழைய நினைவுகளை அகற்றி விட்டான்.

அவளும்அவனைபார்த்ததும்,அவனுடைய கம்பீர தோற்றம் அவளை எழுந்து மரியாதை கொடுக்க வைத்தது.கூடவே இவனை எப்படி சமாளிக்க போகிறோம் என்று தடுமாறினாள்.கல்லூரியில் சேரும் போது அவளுக்கு சற்று தலைக்கனம் இருந்தது.அன்று அவளுடைய அழகை போட்டி போட வேறு பெண்கள் இருக்கவில்லை.அவனை பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு அவன் படிப்பை முடித்து கல்லூரியில் இருந்து போய் விட்டான்.அதற்கு பிறகு அவனை தேட,கிஷோர் மேலே MBA படிக்க வட இந்தியா சென்று விட்டதால்,மீண்டும் அவனை சந்திக்கும்வாய்ப்புகிடைக்கவில்லை.

நண்பர்கள் உசுப்பி விட இவன் அவளிடம் சென்று தான் விரும்புவதாக சொல்லி,அவள் அதை மறுக்க,அவன் அதை அத்துடன் மறந்து விட்டான்.

ஆனால்,சுகன்யா,ஏன் அவனிடம் அப்படி நடந்து கொண்டோம் என்று புரியாமல் குழம்பி கொண்டு இருந்தாள்.

அப்புறம் தான் அவளுக்கு அவினின் படிப்பு திறமை,மேடை பேச்சு,கல்லூரி நாடகத்தில் நடிப்பது போன்ற அத்தனை திறமையும் அவனிடம் இருந்தது என்று புரிந்து கொண்டாள்.

இவள் படித்து முடிக்க,அவளுடைய தந்தை மேலாண்மை படிப்பு படிக்க அமெரிக்கா அனுப்பி விட்டார்.அதனால் அவளும் அவனை பற்றி மறந்து விட்டாள்.மீண்டும் அவனை பார்க்க அவளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது


கிஷோர் எதையும் கண்டுக்காமல் தன்னுடைய முதலாளி கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்லி கொண்டு இருந்தான்.

கடைசியில் இனி மேல் எந்த முடிவும் சுகன்யா அனுமதி கொடுத்த பிறகு தான் செயல் படுத்த வேண்டும்.

ஏதுவாக இருந்தாலும் அவளை சந்தித்து பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறி விட்டார்.

அவனும் சரியென்று தலையை ஆட்டி விட்டு வெளியில் வந்து விட்டான்.வெளியில் வந்து தன் இருக்கைக்கு சென்று மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டிய கட்டளைகளை அனுப்பி விட்டு,சுகன்யா பழைய சம்பவங்களை நினைவில் வைத்து இருப்பாளா,அதை வைத்து இவனை ஏதாவது செய்ய நினைப்பாளா என்று குழம்பி கொண்டு இருந்தான்.


அடுத்த நாள் சற்று குழப்பத்துடன் அவளை பார்க்க சென்றான்.ஆனால் அவளோ அவன் யாரென்று தெரியாதவன் போல வியாபார விசயங்களை பற்றி பேச ஆரம்பித்தாள்.அவனும் அவளுடைய போக்கை கண்டு தன்னை ஒரு நிலை படுத்தி கொண்டு,பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினான்.

அவளோ அவனை ரகசியமாக ரசித்து கொண்டு பேசி கொண்டு இருந்தாள்.

சில சந்தேகங்களை கேட்டு அவனை நீண்ட நேரம் பேச வைத்து அவன் கண்ணையே பார்த்து கொண்டு இருக்க,அவன் தன் முகத்தை கணினி பக்கம் திருப்பி கொண்டு பதில் சொல்லி கொண்டு இருந்தான்.

தன்னுடைய கைபேசி எண்ணை குறித்து வைத்து கொள்ள சொன்னாள்,அவசரமாக தேவை பட்டால்,அழைத்து பேசலாம் என்று அனுமதி கொடுத்தாள்.

இப்படி ஆறு மாதம் ஓடி விட்டது.கிஷோர் பக்கமிருந்து எந்த ஒரு சைகையும் வரவில்லை.ஒரு வேளை தன்னை யாரென்று மறந்து விட்டானா இல்லை,தன்னை முதலாளி ஸ்தானத்தில் வைத்து பார்த்து பேச தயக்கம் காட்டுகிறா னா,புரியவில்லையே என்று கவலை பட்டாள்.

அவனிடம் தானாக தன் விருப்பத்தை சொன்னால்ஏற்றுகொள்வானா.

அதற்கு முன்பு தந்தையின் அனுமதியை பெற வேண்டும் என்று முடிவு செய்து ஒரு நாள் தந்தையிடம்,கிஷோர் போல ஒரு பையன் மாப்பிள்ளையாக வந்தால் நமக்கு வியாபாரத்தை கவனிக்க உதவியாக இருக்கு மல்லவா என்று கேட்டாள்.சுந்தர் அவளுடைய எண்ணத்தை புரிந்து கொண்டு,

அவனிடம் பேசி பார்க்கட்டுமா என்று வெளிப்படையாக கேட்டார்.

அவருக்கும் கிஷோர் போல ஒருவன் தனக்கு மருமகனான வந்தால் ஒத்தாசையாக இருக்கும் என்று எண்ணினார்.

அதற்கு சுகன்யா,தானே அவனிடம் பேசி பார்த்து விட்டு சொல்கிறேன் என்று கூறி விட்டாள்.சுந்தரும் அவளுடைய போக்கில் விட்டு விடலாம் என்று எண்ணி கொண்டார்.

அன்று மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு,அவசரமாக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து,கிஷோர் மற்றும் அவனுக்கு கீழ் பணிபுரியும் அத்தனை பேரையும் வர சொன்னாள்.

அந்த நிகழ்ச்சியில் கிஷோரை வைத்து கொண்டு மற்றவர்களிடம், கிஷோருக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்கலாம் என்று நினைக்கிறேன் என்று அவள் கூற,அப்படி நடந்தால் உடனே வேலையை ராஜினாமா செய்து கொள்கிறோம் என்று அவனுக்கு உதவியாக பணிபுரியும் இரண்டு மேலாளர்கள் சொல்ல,கிஷோர் உடனே மறுத்து பேசினான்.அப்படி நடக்க விட மாட்டேன் என்று உறுதி பட கூறினான்.

அதற்கு அவள் அவரை ஒரு இயக்குனர் பதவிக்கு சிபாரிசு செய்ய முடிவு செய்து இருக்கிறேன் என்று கூறி விட்டு மற்றவர்களை அனுப்பி விட்டு அவனிடம் தனிமையில் பேசினாள்.


தனக்கு அவனை திருமணம் செய்து கொள்ள விருப்பமாக இருக்கிறது.

அதற்கு அவனுடைய பதில் என்னவாக இருக்கும் என்று அவன் முகத்தை பார்த்து அமர்ந்து இருந்தாள்.

அவனோ தனக்கு அவளை திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு அந்தஸ்து இருக்காது என்று மறுத்து பேசினான்.சுகன்யா அவனிடம் தேவையான அந்தஸ்து அவளே உருவாக்கி கொடுக்க போவதாக கூறினாள்.அவனும் அவகாசம் கேட்டு கொண்டு வெளியில் வந்தான்.

கல்லூரியில் அவளிடம் தன் விருப்பத்தை சொல்லும் போது அந்தஸ்து அவன் கண்களுக்கு புலப்படவில்லை.


ஆனால் வாழ்க்கையை ஒவ்வொரு படியும் கடந்து வரும் போது ஏழை பணக்காரன்,உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று சமூகம் வேறு படுத்தி பார்ப்பதை நன்கு உணர்ந்து இருந்தான்.

 இதன் நடுவில் சுந்தர் அவனை வீட்டிற்க்கு அழைத்து இருந்தார்.வியாபார சம்பந்த பட்ட கோப்புகளை எடுத்து கொண்டு சென்றான்.அவரோ அதை எதையும் பார்க்க விரும்பவில்லை.அவன் கையை பிடித்து தன்னுடைய மகளை திருமணம் செய்து கொண்டு,இந்த நிர்வாகத்தை நன்கு கவனித்து வர சொன்னார்.தன்னுடைய இருதயம் பலகீனமான நிலையில் இருப்பதாக மருத்துவர் சொன்னார்.தனக்கு அவனை விட நம்பிக்கையான ஒரு நபர் தென்படவில்லை,என்றும் கூறி விட்டு,என் மகளுக்கும் அவன் ஒரு உற்ற துணையாக இருப்பான் என்று கருதுவதாக அவனிடம் வேண்ட,அவருக்கு வேண்டியும் தன்னால் வளர்ந்த இந்த நிறுவனம் நொடித்து போக கூடாது என்று கருதியும் அவர் சொல்லுக்கு கட்டு பட்டான்.

இப்போது சுகன்யா அவனுடைய ஆசை மனைவி தான்.ஆனால் அவனால் மனதார காதலிக்க முடியவில்லை.அவளை தொடும் போதெல்லாம் அவளுடைய அனுமதி பெற்ற பிறகு தான் ..

அன்று அவளை விரும்பினான்.

இன்று அவள் அவனுக்கு சொந்தம் தான்.ஆனால் விரும்ப முடியவில்லை.என்ன குறுக்கே நிற்கிறது என்று அவனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

அவள் ஓடி வந்து கட்டி பிடி ப்பாள்,

கொஞ்சுவாள் கெஞ்சுவாள்.

அவளால் காதலிக்க முடிந்தது.இவனால் முடியவில்லை.

அவனுக்கு மீண்டும் காதல் வரவில்லை.

முற்றும்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract