காதல் முறிவு
காதல் முறிவு
காதல் முறிவு
அவளுக்கு ரெக்கை கட்டி விண்ணில் பறக்க ஆசை இல்லை.திரை படத்தில் வரும் கதாநாயகி போல காதல் செய்ய விருப்பம் இல்லை.அவள் மனதையும் அவளையும் புரிந்து கொள்ளும் ஒரு சராசரி ஆண்மகன் துணை இருந்தால் போதும் என்று தான் நினைத்து கொண்டு இருந்தாள்
ஶ்ரீ.
அவளுடைய அப்பா ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார்.இரு சக்கர வாகனம் விற்பனை மற்றும் பழுது பார்த்தல் வேலையை செய்து வந்தார்.ஆண்டவன் புண்ணியத்தில் நல்ல வருமானம்.ஶ்ரீ ஒரே பெண்.
இது வரை சம்பாதித்த சொத்து அவள் தேவைக்கு அதிகமாக தான் இருக்கும்.
ஶ்ரீ யின் அப்பா சரவணன்,அம்மா லட்சுமி,லட்சுமியை மணம் முடித்த பிறகு தான் அவருக்கு லட்சுமியின் அருள்.ஒரு இரு சக்கர விநியோகம் செய்யும் நிறுவனத்தில் கணக்கு
பார்க்கும் வேலையில் இருந்தார்.அங்கு விற்பனையில் பணி புரிந்த லட்சுமியை விரும்பி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.அங்கு வேலை பார்த்த அனுபவத்தை வைத்து இருவரும்
வேலை பார்த்த நிறுவனத்தில் வாகன பழுது பார்க்கும் சேவையை
கேட்டு பெற்று அதை திறம்பட நடத்தி,இப்போது வேறு உற்பத்தியாளர் தயாரிக்கும் இரு சக்கர வாகனம் விற்பனை உரிமையை பெற்று வியாபாரம் செய்து வருகிறார்.லட்சுமியும் கணவன் சரவணன் கூட உழைத்து நல்ல நிலைக்கு கொண்டு வர நல்ல பாடு பட்டு இருந்தாள்.
ஶ்ரீ யும் அதே நிறுவனத்தை நிர்வாகம் செய்ய தினமும் அப்பா கூட செல்வாள்.லட்சுமி இப்போது வீட்டு நிர்வாகத்தை மட்டும் கவனித்து வந்தாள்.ஆண்டுக்கு ஒரு முறை வெளி நாட்டில் கூடும் வினி யோகம் செய்யும் உரிமையாளர் கூட்டம் நடை பெறும்.அதை உற்பத்தியாளர் ஏற்பாடு செய்யும் நிகழ்வு.
அப்படி ஒரு கூட்டம் சிங்கப்பூரில் நடந்தது.அதில் சிறந்த விற்பனை,நிர்வாகம்,வாடிக்கையாளர் சேவை என்று பல பரிசுகள் சரவணனுக்கு கிடைக்க,மேடை ஏறி அந்த பரிசுகளை பெற்று கொண்டாள் ஶ்ரீ.அது போல நிறுவனம் நடத்தும் ராம் அவளையும் சரவணனையும் பார்த்து வாய் பிளக்க நின்று பார்த்தான்.தானே சென்று சரவணன் மற்றும் ஶ்ரீ யுடம் அறிமுகம் ஆகி கொண்டான்.பரஸ்பரம் தொலை பேசி எண்ணை பரிமாறி கொண்டனர்.
இந்தியா திரும்பியதும் அடிக்கடி ஶ்ரீ க்கு போன் செய்து பேசினான்.
இருவரும் நட்பாக பழகி ராம் அவளிடம் தன் காதலை தெரிவித்தான்.ஶ்ரீ க்கும் மகிழ்ச்சி தான்.ராமின் விருப்பத்தை அப்பா சரவணனிடம் சொல்ல அவரும் எந்த மறுப்பும் சொல்ல வில்லை.இருவரும் ஒரே வியாபாரம்
அவருக்கு பிறகு மாப்பிள்ளை பார்த்து கொள்வார்,அதுவும் நன்மைக்கே என்று கூறி சம்மதம் கூறி இருந்தார்.
ஶ்ரீ யின் சம்மதத்தை பெற்ற பிறகு தன்னுடைய பெற்றோரிடம் இதை
பற்றி ராம் பேசினான்.அவனுடைய பெற்றோர்கள் மிகவும் ஆச்சாரம் பார்க்க கூடியவர்கள்.உடனே ராமிடம் அவர்கள் ஜாதி குலம் கோத்ரம் பூர்விகம் தெரியாமல் எப்படி சம்பந்தம் பேசுவது என்று ஒரு ஐயத்தை கிளப்பினார்கள்.
அன்று வெள்ளிக்கிழமை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்து விட்டு ராமுக்கு போன் செய்தாள் ஶ்ரீ.அவனும் உடனே எடுத்து பரஸ்பரம் நலம் விசாரித்த பிறகு,தன்னுடைய பெற்றோர்களின்
ஐயத்தை பற்றி கூற,ஶ்ரீ ககு ஒன்றும் புரியவில்லை.இதுவரை அவள் என்ன ஜாதி,அப்பா அம்மா என்ன ஜாதி என்று கேட்டது இல்லை.பள்ளியில் சேரும் போது OBC என்று பார்த்த நினைவு.சரி நான் அப்பாவிடம் இதை பற்றி பேசுகிறேன் என்று கூறி போனை வைத்து விட்டாள்.கோவிலுக்கு போன மகிழ்ச்சி இப்போது அவளிடம் இல்லை.
நேராக வீட்டிற்க்கு வந்து அம்மாவிடம் சொல்ல,அவரும் சரியாக பதில் கூறாமல் அப்பாவிடம் பேசு என்று கூறி விட்டார்.அப்பா நிறுவனத்திற்கு சென்று விட்டார்.இனி இரவு தான் பேச முடியும்.உடனே ராமுக்கு போன் செய்து அவர்களுடைய ஜாதி குலம் போன்ற விவரங்களை கேட்டு அறிந்து கொண்டாள்.
இரவு ஒன்பது மணிக்கு தான் அப்பா வந்தார்.உணவு அருந்தி விட்டு,டிவி பார்த்து கொண்டு இருக்கும் போது ஶ்ரீ அப்பாவிடம் ராமிடம் கேட்ட விவரங்களை கூறி,அவனுடைய பெற்றோரின் சந்தேகங்களையும் அப்பாவிடம் கூறினாள்.
ஒன்றும் பிரச்சினை இல்லை நாமும் அந்த வகுப்பை சேர்ந்தவர்கள் தான் என்று கூற,ஶ்ரீ மகிழ்ச்சி அடைந்தாள்.
சரவணனும் ராமின் அப்பாவை சந்தித்து பேசுவதாக கூறினார்.
அடுத்த நாள் காலை இந்த விவரங்களை ராமிடம் கூறி,அப்பாவை எப்போது உங்க வீட்டிற்க்கு அனுப்பட்டும் என்று கேட்டாள்.அவனும் தன்னுடைய அப்பாவிடம் பேசி விட்டு கூறுவதாக பதில் சொன்னான்.
இது நடந்து இரண்டு நாளைக்கு பிறகு,ராமின் அப்பா மட்டும் சரவணனை பார்க்க ஷோ. ரூமுக்கு வந்தார்.வந்து தன்னை அறிமுக படுத்தி கொண்டு அவர் வந்த வேலையை பற்றி கூற,சரவணனும் தன்னுடைய பூர்விகம்,குல தெய்வம் என்று விவரம் கூற,அதற்கு ராமின் அப்பா,ஶ்ரீ யின் அம்மாவின் பூர்விகம்
பற்றி கேட்க,சரவணனும் தயங்கிய படி,தன்னுடைய காதல் திருமணம் பற்றி கூறினார்.கேட்ட உடனே அவர் நான் சந்தேக பட்டது சரி தான்,என்று கூறி விட்டு,விடை வாங்கி கொண்டார்.
ஒரு வாரம் ராமிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.ஶ்ரீ போனில் கூப்பிட அவன் வேலையில் இருப்பதாக செய்தி அனுப்பினான்.மீண்டும் முயற்சி செய்த போது,இனி என்னை தொடர்பு கொள்ள வேண்டாம்,நம்முடைய திருமணம் நடக்காது என்று செய்தி அனுப்பி விட்டு அவளுடைய நம்பரை பிளாக் செய்து விட்டான்.
இதனால் மனம் உடைந்து ஶ்ரீ அப்பாவிடம் கூற,விடுமா,ராமை விட நல்ல மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்கிறேன் என்று கூறி விட்டார்.
இருந்தாலும் தன்னுடைய காதல் ஏன் தடை பட்டது என்று அவளுக்கு புரியவில்லை.
சில. நாட்கள் பிறகு லட்சுமி சரவணனிடம் என்னங்க நம்முடைய திருமணம் ஶ்ரீ யின் திருமணத்தை பாதிக்குமா என்று கேட்க,அது ஒன்றும் இல்லை.அவளுக்கும் நாம் செய்த மாதிரி ஒரு மாப்பிள்ளையை பார்க்கலாம் என்று கூறி சமாதான படுத்தினார்.
இருந்தாலும் லட்சுமி தான் ஒரு கீழ் ஜாதி பெண் என்ற காரணத்தால் ஶ்ரீ திருமணம் நின்று போனது மிகவும் வருத்தத்தை அளித்தது.
ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் மனிதன் ஜாதி பெயரை சொல்லாமல் வாழ முடியாது போல இருக்கு என்று சரவணன்,வேறு மாப்பிள்ளை தேட தொடங்கினார்.
முற்றும்.