Vadamalaisamy Lokanathan

Fantasy

4  

Vadamalaisamy Lokanathan

Fantasy

ஜீ மெயில்

ஜீ மெயில்

2 mins
354


ஜிமெயில்


திவ்யா காலையில் சோம்பலுடன் கண் விழித்து பார்த்தாள்.மணி 6.50

ஏழு மணிக்கு அவள் வேலைக்கு போக வேண்டிய கேப் வந்து விடும்.

இன்றைக்கும் சொந்த காசு தான் என்று நொந்து கொண்டு தன் கைபேசியை எடுத்து என்ன மெசேஜ் வந்து உள்ளது என்று பார்த்தாள்.

What's app,sms பார்த்து விட்டு ஜிமெயில் திறந்து பார்க்க அதில் சம்பந்தம் இல்லாத ஒரு மெயில் வந்து இருப்பதை பார்த்தாள்.

அதில் இருப்பதை பார்த்தால் அது ஒரு வேலை நியமன உத்தரவு.ஆனால் பெயர் எதுவும் குறிப்பிடவில்லை.எந்த நிறுவனம் அனுப்பி உள்ளது என்ற விவரம் மட்டும் இருந்தது.

அது அவள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் போட்டி நிறுவனம்.

அதில் என்ன பதவி,என்ன சம்பளம் மற்ற சலுகைகள் போன்ற விவரங்கள் இருந்தாலும்,அது அவளை வசீகரிக்கும் அளவில் இருந்தது.உண்மை தான் தற்போது பார்க்கும் வேலையை விட கூடுதல் சம்பளம் கிடைத்தால் இந்த வேலையை விட்டு விட எண்ணினாள்.நிறைய நிறுவனத்திற்கு விண்ணப்பம் அனுப்பி தான் இருந்தாள்.அதற்காக இருக்கும் வேலையை உதறி தள்ளிவிட்டு போக அவளுக்கு மனம் இல்லை.காரணம் வந்த நாள் முதல் அவளை நன்கு கவனித்து வருகிறார்கள்.மற்ற நிறுவனங்கள் என்ன ஊதியம் கொடுப்பார்கள் என்று அறிந்து கொள்ள இவ்வாறு பல பக்கம் விண்ணப்பித்து நேர்காணல் போய் வருவது உண்டு.

வந்த நியமன உத்தரவை எடுத்து கொண்டு நேராக தன்  மனித வள மேலாளரை சந்தித்து இப்படி ஒரு உத்தரவை எனக்கு எதற்க்கு அனுப்பி வைத்தீர்கள் என்று வினவ அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார்.

சார் இது உங்க பெர்சனல் மெயிலில் இருந்து வந்து உள்ளது.என்னை சோதித்து பார்க்க அனுப்பி உள்ளீர்கள்.கவலை வேண்டாம்,நான் வேறு வேலைக்கு முயற்சி செய்ய மாட்டேன்.இப்படி என்னை சோதிக்காதீர்கள்,ஆனால் இதில் குறிப்பிட்டு உள்ள ஊதியம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். இல்லை என்றால் வேறு வேலைக்கு நிச்சயம் முயற்சி செய்வேன் என்று கூறினாள்.

வெளியில் வந்து நல்ல வேளை ,அனுப்பியவர் விலாசம் இருந்ததால் தப்பித்தேன்.இதை எடுத்து கொண்டு அதில் குறிப்பிட்ட விலாசதிர்க்கு சென்று இருந்தால் இருக்கிற வேலையும் இழந்து இருப்பேன்.

நன்றி கடவுளே என்று கூறி விட்டு தன் வேலையில் கவனம் செலுத்தினாள்.

தன்னை திசை திருப்ப வந்த மெயில் என்று புரிந்து கொண்டாள்.



Rate this content
Log in

Similar tamil story from Fantasy