இளமை
இளமை
ராஜாவும் ராணியும் ஒருவரை ஒருவர் பிரியாத தம்பதிகள்.எப்பவம் போல இரவு உணவை முடித்து விட்டு,வாசலில் பாயை விரித்து படுத்து கொண்டு,நட்சத்திரங்களை எண்ணி கொண்டு இருந்தனர்.உறங்கும் முன்பு தினமும் தவறாமல் செய்யும் வழக்கம்.
படுத்து கொண்டு இருந்த ராஜா மெதுவாக ராணியின் இடுப்பை கிள்ள,ராணிக்கு வலித்தாலும் சத்தம் போட முடியவில்லை.
அப்போது அவளுடைய நினைவுகள் பின்னோக்கி சென்றது. அது அவர்களது இளமை காலம்.திருமணம் ஆன புதிது,கூட்டு குடும்பம்,பெரிய வீடு,கூட மாமனார்,மாமியார்,கணவனின் மூத்த சகோதரர் இரண்டு பேரின் குடும்பம்,குழந்தைகள் என்று ஒரே கூட்டம் கணவனின் முகம் கூட பார்க்க கிடைக்காது. அப்படி பார்த்தாலும் இருட்டுக்குள்.
அப்படி பட்ட சூழ்நிலையில் வாழ்ந்து விட்டு இப்போது இருவர் மட்டும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.காரணம் வெளியூர் வேலை,அடிக்கடி இட மாற்றம்,ஓய்வு பெற்றதும் பக்கத்து கிராமத்தில் வீடு வாங்கி,வாழ்ந்து வருகிறார்கள்.
கூட்டு குடும்பத்தில்,சமையல்,மற்றும் வீட்டு வேலைகளை முடித்து விட்டு,அவர்களுக்கு என்று ஒதுக்க பட்ட அறையில் நுழையும் போது மணி பதினொன்று.அவளுக்காக தூங்காமல் காத்து இருக்கும் கணவன்,அவள் நுழைந்ததும்,அப்படியே அள்ளி கொள்வான்.அதற்கு பிறகு தான் பிரச்சனையே.
அவனுடைய முரட்டு தனமான உறவில் அவளால் சத்தம் கூட போட முடியாது.சத்தம் வருவது போல் இருந்தால்,அவன் அவள் வாயை பொத்தி கொள்வான்.மூச்சு திணறதிணற இருமல் வந்தால்,வெளியில் மாமியார் பாலில்,மஞ்சள் கலந்து குடித்து இருக்கலாம் என்று ஆலோசனை வரும்.இவள் பிரச்சினை யாருக்கு தெரியும். போதா குறைக்கு, கிள்ளுவான்,கண்ட இடத்தில் கடிப்பான்.சத்தம் வந்தாலும் சிரமப்பட்டு அடைக்கி கொள்வாள்.
வெளியூர் சென்ற பிறகும்,வளர்ந்த குழந்தை படுக்கை அறையில் இருக்க,அவனுடைய வேட்கைக்கு,சமையலறை தான் அந்தப்புரம்.சுவர் தாண்டினால் பக்கத்து வீட்டிற்கும் சத்தம் கேட்கும். அங்கும் அவள் ஒரு ஊமையாக தான் இருக்க முடிந்தது. அது இன்று அவள் நினைவிற்கு வர, இப்போதும் அவளால் சத்தம் போட முடியவில்லை.அந்த நீங்காத நினைவுகளை அசை போட்டு கொண்டு,ராஜாவை திருப்பி கிள்ள,அவனோ ஏண்டி கிள்ளரே என்று உரக்க சொல்ல,பக்கத்து வீட்டு சேலை வியாபாரி,சார் நாளைக்கு புது சேலை ஒன்று கொடுத்து விடவா,வாங்கி கொடுங்க இனி கிள்ள மாட்டாங்க என்று கூற.
ராணியும் போங்க அண்ணா,அவர் விளையாட்டிற்கு கத்து கிரார்.என்று சொல்லி அந்த சம்பவத்தை ரசித்த படி,வீட்டிற்குள் சென்றாள்.