Vadamalaisamy Lokanathan

Fantasy

5  

Vadamalaisamy Lokanathan

Fantasy

ஃபேண்டஸி

ஃபேண்டஸி

2 mins
454



அப்பு  மதியம் செல்லும் விமானத்தில் மும்பை செல்ல டிக்கெட் வாங்கி இருந்தான்.விமான நிலையம் புறப்பட  இருக்கும் போது

காலநிலை காரணம்  விமானம் தாமதமாக புறப்படும் என்று செய்தி வந்தது.பிறகு இரண்டு மணி நேரம் தாமதமாக கடும் மழையின் நடுவே விமானம் புறப்பட்டு சென்றது.பிரயாண நேரம் 90நிமிடம்.அறுபது நிமிடங்களுக்கு பிறகு விமானத்தில் ஒரு அவசர செய்தி ஒலி பெருக்க பட்டது.வானத்தில் தீடீரென்று இருள் சூழ்ந்து விமானம் தொலை தொடர்பு துண்டித்து எப்படி பயணிப்பது என்று தெரியாமல் இருக்கிறது என்று செய்தி வந்தது.பிறகு அவசரமாக மால்தீவுகளில் இறங்குவதாக விமானி சொன்னார்.சொல்லி முடிப்பதற்குள் ஒரு வெடி சத்தமும்,மின்னல் போன்ற ஒளியும் தெரிந்தது.அதற்கு பிறகு என்ன நடந்தது என்று அப்புக்கு தெரியவில்லை.

கண் விழித்து பார்த்தால் ஒரு குழாய் போல உள்ள படுக்கையில் படுத்து இருந்தான்.அவனை சுற்றி சுமார் பத்து ஆண்களும் ஐந்து பெண்களும் நின்று கொண்டு இருந்தார்கள்.அவன் உடம்பில் சொட்டு துணி இருக்கவில்லை. போர்வை இருக்கா என்று சுத்தியும் பார்க்க,உடம்பை மூடஒரு நைலான் துணி மட்டும் இருந்தது.அதுவும் கண்ணாடி இழை போல இருந்தது.

அதை வைத்து மூடினாலும் பயன் இல்லை என்று தெரிந்தது.

கவனித்து பார்த்த போது,ஒரு குச்சியால்,தன்னுடைய  ஒவ்வொரு பாகத்தையும் தொட்டு விளக்கி கொண்டு இருப்பதாக புரிந்து கொண்டான்.

அவனுக்கு ஏதோ வேற்று கிரகத்தில் இருப்பதாக தோன்றியது.ஆனால் அங்கு பார்த்த எல்லோரும் பத்து அடி உயரம் இருந்தார்கள்.அங்கு இருந்த எப்படி தப்புவது என்று யோசித்து கொண்டே தூங்கி விட்டான்.

எப்படி தப்புவது என்று தன்னை தானே கேட்க.கண் விழித்து பார்த்தா

தானே வழி தெரியும் என்று குரல் கேட்க.

சரி கண்ணை விழித்து பார்க்கலாம் என்று கண் விழிக்க,விமானம் காலியாக இருந்தது.விமான பணி பெண் தான் கண் விழித்து பார்க்க சொன்னார்.அப்போ இவ்வளவு நேரம் கண்டது கனவா என்று கேட்டு கொண்டு விமானத்தில் இருந்து இறங்கினான்.

முற்றும்.




రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar tamil story from Fantasy