ஹோலி
ஹோலி
இந்த பண்டிகை வட நாட்டில் பிரபலமாக இருந்தாலும்,இப்போது நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டாட படுகிறது.
காரணம்,அதை கொண்டாடும் மக்கள் நாடு முழுவதும் பரவி இருப்பது தான்.
உயர்வு தாழ்வு பேதம் இன்றி இந்த பண்டிகை கொண்டாடுவதை பார்க்கும் போது,மனதில் மகிழ்ச்சி தோன்றுகிறது.
இதுவே தமிழ்நாட்டில் அம்மனுக்கு பண்டிகை வரும் போது,
ஒரு குறிப்பிட்ட நாளில் வண்ணம்,அதாவது நீரில்
மஞ்சள் பொடி கலந்து அந்த நீரை ஒருவர் மீது ஒருவர் குழாய் மூலம்
பீ ச்சீ அடித்து விளையாடுவது உண்டு.அது போல தான் ஹோலி.
அது மகிழ்ச்சியின் வெளிப்பாடு,சமத்துவத்தின்
அடையாளம்.
