Vadamalaisamy Lokanathan

Fantasy

4  

Vadamalaisamy Lokanathan

Fantasy

ஏலியன்

ஏலியன்

1 min
408


ஏலியன்


லதா சமையல் அறையில் மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தாள்.எவ்வளவு வேகமாக வேலை செய்தாலும்,வேலைகள் முடிவது இல்லை.அலுவலகம் செல்ல தாமதம் ஆனது.

கணவரை உதவிக்கு அழைத்தாள்,அவனுக்கு இருந்த IT வேலையில் கணினியை விட்டு அவனால் விலக முடியவில்லை.

போதாகுறைக்கு இரண்டு குழந்தைகள் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.அவர்களுக்கு பாடங்கள் சொல்லி கொடுக்க முடியவில்லை,அவர்களுடன் பொழுதை கழிக்க முடியவில்லை.

கணவன் 12மணி நேரத்திற்கு மேல் கணினியுடன் போராடி கொண்டு இருந்தான்.

வேலையை விட்டு விட நினைத்தால் வீட்டு கடன் நினைவிற்கு வந்தது,கணவன் வேலை எப்போதும் அந்தரத்தில்.நினைத்தால் அவனுக்கு வேலை போய் விடும்.

இதுவே அவளுக்கு பெரிய மன உளைச்சல்.ஒரு நாள் சாயங்காலம் அலுவலகத்தில் இருந்து களைப்பாக

திரும்பி கொண்டு இருக்கும் போது குழந்தைகள் பொம்மை போன்ற ஒரு உருவத்தை வைத்து கொண்டு விளையாடி கொண்டு இருந்தார்கள்.அது என்ன என்று கேட்ட போது வாசலில் செடிக்கு அடியில் இருந்தது.அதற்கு இரு கண்கள் மட்டும் இருக்கிறது. ஆனால் என்ன சொன்னாலும் செய்கிறது என்று சொன்னார்கள் குழந்தைகள்.

நேற்று இரவு இடி மின்னலுடன் பெரிய மழை பெய்தது.ஓரிரு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தாதாக பேப்பரில் போட்டு இருந்தார்கள்.கட்டியாக இவள் வீட்டிலும் விழுந்தது.அதில் கலந்து வந்தது தான் இந்த ஏலியன்.அதுக்கு எல்லாமே தெரிந்து இருந்தது.குழந்தைகள் கூட விளையாடி மகிழ்வித்து கொண்டது.வீட்டு பாடம் சந்தேகங்களை தீர்த்து கொடுத்தது.

லதாவின் சமையல் அறை பாத்திரங்கள் சுத்தம் செய்தது.லதாவின் மகிழ்ச்சிக்கு அளவில்லை.

வெகு நேரம் தூங்கி விட்டோம் என்று அவசரமாக கண் விழித்தாள் லதா.கண் விழித்து ஏலியன் எங்கே என்று தேடினாள்.குழந்தைகள் ஒரு கரடி பொம்மையை வைத்து தூங்கி கொண்டு இருந்தார்கள்.

ஐய்யோ இத்தனையும் கனவா என்று தன்னை நொந்து கொண்டு வழக்கம் போல அவளுடைய வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.


Rate this content
Log in

Similar tamil story from Fantasy