saravanan Periannan

Abstract Drama Classics

4.7  

saravanan Periannan

Abstract Drama Classics

சுதந்திரக் உணர்வே

சுதந்திரக் உணர்வே

2 mins
343


சத்யமூர்த்தி அவன் வண்டிக்கு பெட்ரோல் போடுவதற்காக அவன் அப்பா ராஜாவிடம் பணம் வாங்க போனான்.

அவன் அப்பா அம்மா அறைக்கு நுழைவதற்கு முன் அவன் பெயர் அடிபடுவதை உணர்ந்தான்.


ராஜா பேசிக்கொண்டிருந்தார் "நம்ம சத்யா இன்னும் எத்தனை நாள் என் கையை எதிர்பார்த்து இருப்பான்.

பெத்தோம்,படிக்க வச்சோம், முடிஞ்ச அளவு கஷ்டப்படாம அவனை பார்த்துக்கிட்டோம்.

நமக்கும் ஆசை இருக்காதா அவன் சம்பாதிச்ச காசுல ஒரு சின்ன பொருள் வாங்கனும் அப்படினு."

இதை இவ்வளவு நேரம் மறைவாய் நின்று கேட்டுக்கொண்டிருந்த சத்யா அவன் தன்னை தானே அவன் அறையில் இருந்த கண்ணாடியில் பார்த்துக் கொண்டான்.

அவன் முதுகில் ஒரு நடுக்கம் பாய்ந்தது.

இதே நேரம் சத்யா வீட்டிற்கு எதிரில் உள்ள தெருவில்,

சின்னப்பசங்க எல்லாரும் ஒட்டப்பந்தயம் வச்சுக்கிட்டு இருந்தாங்க.

சரவணன்,கபிலன்,விக்னேஷ் மற்றும் கெவின் இந்த மின்கம்பத்தில் இருந்து அடுத்த தெருவில் உள்ள மின்கம்பம் வரை ஓட வேண்டும்.

அனைவரும் ஓடினர்,கெவின் முதலாவதாக வந்தான்,சரவணன் மூன்றாவதாக வந்தான்.

அனைவரும் அருகில் உள்ள வீட்டின் படியில் அமர்ந்தனர்.

அப்பொழுது சரவணன் என்டா கெவின் நான் நல்லா ஓடுறேன் வேற எதாவது நான் ஓடுறப்ப மாத்தனுமா.

கெவின் சிரித்தப்படி மச்சா தவளை மாதிரி ஓடாதே என சொல்லி சிரித்தான்.

மற்ற இருவரும் சிரிக்க சரவணன் கண்களில் நீர் வந்தபடி அவன் வீட்டை நோக்கி ஓடினான்.

இதேநேரம் ஒரு கல்லூரி நடைபாதையில்,

கயல்விழி முகத்தில் விழுந்த கேசத்தை விரல்களால் விழக்கினாள்.

அங்கு ஓடிவந்த கண்ணன் கயல் பெயரை கத்தி அழைத்தப்படி ஓடி வந்தான்.

கயல் கெஞ்சினாள் பீளிஸ் கண்ணா இட்ஸ் ஓவர்.

ஏன் எதுக்கு,நான் என்ன பண்னேன் முறைத்தப்படி கேட்டான் கண்ணா.

உன்னை ஹர்ட் பண்ண விரும்பல நான் போறேன் திரும்பி வேகமாக நடந்தாள் கயல்விழி.

சரவணன் அழுதபடி வீட்டிற்கு வந்து அவன் அம்மாவிடம் நடந்தை சொல்லிவிட்டு தொடர்ந்தான் 

"அம்மா,நான் குழந்தையா தொட்டில்ல தூங்குறப்ப குப்பற விழுந்து என் வலது கால பாதத்தில் உள்ள எலும்பு வளைஞ்சிடுச்சு.

டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் கொஞ்சம் சரி பண்ணிங்க.

நீங்க என்ன சொன்னீங்க உன்னால கால நேரா வச்சு நடக்க முடிஞ்சா கால் சரியாகும் அப்படினு சொன்னீங்க என்னால முடியல."

சரவணனின் அம்மா சொன்னார் "இன்னும் நீ வெளி உலகத்தையே பார்க்கல அங்க உன்னை‌ மட்டம் படுத்த நிறைய பேர் காத்துக்கிட்டு இருப்பாங்க.

உதவி செய்யவும் காத்துக்கிட்டு இருப்பாங்க.

நீ எவங்க எப்படினு அனுபவத்துல தான் கத்துக்க முடியும்.


உன் கிட்ட இருக்க பிரச்சனைய சரி பண்ண பாரு,எவன் கேலி பண்ணாலும் அந்த வார்த்தைகளை மனசுக்கு கொண்டு போகாதே.

சரி வா நம்ம டாக்டரை போய் நாளைக்கு பார்ப்போம்."

என சரவணன் அம்மா சொல்லி முடிக்க சரவணன் அவன் அம்மா மடியில் போய் படுத்துக்கொண்டு கண்ணீர் துளிர்த்தான்.

கயல்விழி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தாள்.

பஸ் வருவதை அதன் ஹார்ன் காதுக்கு உணர்த்த வந்த நின்ற பேருந்து எங்கு செல்கிறது என்று செல்லும் வழியை பார்த்து விட்டு பேருந்தில் ஏறினாள்.

இருக்கையில் அமர அவள் நினைவுகள் அவளை ஆக்கிரமித்தன.


கண்ணனும் அவளும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.

கயல் அவளை நல்ல தோழனாக பார்த்தாலும் அவன் அவளை தோழியாக ஏற்கவில்லை.

அவளிடமிருந்து பாட சந்தேகங்களை தெளிவு படுத்திகொண்டான்.

அவள் உணர்வுகளை காயப்படுத்தி அதில் மகிழ்ச்சி பெற்றுக்கொண்டிருந்தான்.

அவளை கேலி செய்தும்,அவள் இல்லாதபோது பிறரிடம் அவளை பற்றி தவறாக பேசுவது என செய்தான் கண்ணன்.

கயல் கண்ணனை விட்டு விலக நினைத்தாலும் உணர்ச்சி பூர்வமாக அவளை சிறைபிடித்தான்.


எவ்வளவோ நாள் அவள் அதிலிருந்து விடுபட நினைத்தாள்.

கண்ணனிடம் நட்பை முடித்து கொள்ளலாம் காரணம் கேட்காதே என சிறிது நேரத்திற்கு முன் கல்லூரியில் அவன் முகத்துக்கு நேராக சொல்லிவிட்டு வந்தாள் கயல்.


சத்யா அன்றே ஒரு பார்ட் டைம் வேலைக்கு அப்ளை செய்து,வேலையை உறுதி செய்துவிட்டு வீட்டிற்கு வந்தான்.

அவன் அப்பா,அம்மாவிடம் சத்யா பகுதி நேர வேலை கிடைத்ததை சொல்லி முழு நேர வேலை கிடைக்கிற வரைக்கும் அந்த பகுதி நேர வேலையை செய்ய போவதாக சொன்னான்.

சத்யாவின் அப்பா ராஜாவும்,அவன் அம்மாவும் முகத்தில் மகிழ்ச்சியௌ காட்டினர்.

சத்யா,சரவணன், கயல் மூவரும் அவரவர் வீட்டு மொட்டை மாடிககு சென்று அவரவர் உடைய மாடி தோட்டத்தை கண்டு ரசித்தனர்.

மூவரும் சந்தோசத்தில் அந்த சில்லான காற்றை உள்ளிழுத்து வெளி விட்டனர்.


மூவரும் அந்த சுதந்தர‌உணர்வை அனுபவித்தனர்.


சத்யா அவன் அப்பா,அம்மாவை அவனை பற்றிய கவலையிலிருந்து சுதந்திரம் பெற வைத்தான்.


சரவணன் அவன் மனதில் அவன் கால்கள் பற்றி வந்த கேலிகளை உதறி தள்ளிவிட்டு அந்த கேலி தந்த வலியிலிருந்து சுதந்திரம் பெற்றான்.


கயல் தன்னை உணர்வுபூர்வமாக நட்பு என்ற பெயரில் கைது செய்திருந்த கண்ணனிடமிருந்து சுதந்திரம் பெற்றாள்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract