சொந்த ஊர் கதைகள்
சொந்த ஊர் கதைகள்
சொந்த ஊர் கதைகள்1
வேலன் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன்.ஆனால் அவனுக்கு இரண்டு நண்பர்கள்,பணக்கார வீட்டை சேர்ந்தவர்கள்.பல கஷ்டங்களுக்கு நடுவே வேலனின் அப்பா அவனை நன்றாக படிக்க வைத்தார்.அவன் இருப்பது ஒரு கிராமம்.அதனால் அவனுக்கு வழிகாட்ட யாரும் இல்லை.எப்படியோ கல்லூரியில் சேர்ந்து இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்று விட்டான்.அதற்கு பிறகு எங்கு வேலை தேடுவது,யாரை அணுகுவது போன்ற விவரங்கள் அவனுக்கு சுத்தமாக தெரிந்து இருக்கவில்லை.மேலே படிக்கலாமா,
படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்று கூட தெரிந்து கொள்ள அவனுக்கு வாய்ப்பு கிடைக்க
வில்லை.நல்ல வேளை அவனுக்கு நண்ப ராக இருந்த இரு செல்வந்தர் வீட்டு பிள்ளைகள் தான் பக்கத்தில் இருந்த நகரத்தில்,அந்த பிள்ளை
களின் நண்பர்கள் நடத்தும் ஒரு
நிறுவனத்தில் வேலைக்கு ஏற்பாடு
செய்து கொடுத்தார்கள்.
1975ம் வருடம்,வேலைக்கு சேர்ந்த வருடம்.அன்று முதல் இன்று வரை
அதே நிறுவனத்தில் வேலன் பணி செய்து வருகிறான்.ஒரு குமாஸ்தா ஆக சேர்ந்து,ஒரு நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டான்.கிட்டத்தட்ட ஐம்பது வருடம் ஒரே நிறுவனத்தில்,
வேலன் இன்றளவும் அந்த நன்றியை மறக்காமல்,நண்பர்களை தெய்வம் போல மதித்து வருகிறான்.
