சொந்த ஊர் கதைகள் 4
சொந்த ஊர் கதைகள் 4
சொந்த ஊர் கதைகள் 4
வேலன் சொந்த ஊருக்கு வரும்போதெல்லாம்
ஊர் மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று அடிக்கடி உறவினர் நடுவே பேசி விட்டு செல்வது வழக்கம்.
ஆனால் ஒவ்வொரு முறையும்,சரி சரி என்று தலையை ஆட்டும் அந்த ஊர் மக்கள்,அவன் அங்கு இருக்கும் போதே, சண்டை போட ஆரம்பித்து விடுவார்கள்.
காரணம் ஒன்றும் பெரிதல்ல,நீயா நானா என்ற மனப்பான்மை தான்.அந்த ஊர் மக்கள் நடுவே ஒற்றுமை இருந்தாலும்,பக்கத்து ஊரில் இருக்கும் யாராவது,இந்த ஊர் மக்கள் நடுவே புகுந்து,ஏதாவதுபிரச்சனை யை தூண்டி விட்டு சண்டை போட வைத்து விடுவார்கள்.
ஊர் இரண்டு பட்டால் யாருக்கோ கொண்டாட்டம் என்று சொல்வார்கள்,அது போல வேலன்கிராமத்தில் இரண்டு கோஷ்டிகள் சண்டை போட்டுக்கொண்டால்
அடுத்த ஊர் மக்களுக்கு கொண்டாட்டம்.
கோஷ்டி சண்டையில் பரஸ்பரம் வாங்க மாட்டார்கள், கொடுக்க மாட்டார்கள்.
ஒரு தீப்பெட்டி வாங்க கூட,உள்ளூரில்
இவன் கடைக்கு போக கூடாது என்று அடுத்த ஊரில் உள்ள கடைக்கு போவார்கள்.
ஒவ்வொரு செயலிலும் அடுத்த ஊர் மக்கள் இந்த தந்திரத்தை புரிந்து கொண்டு,வேலன் ஊரில் மக்கள் நடுவே கலகத்தை மூட்டிக்கொண்டு தான் இருந்தார்கள்.
வேலன் ஊர் மக்களும் இது வரை அதை புரிந்து கொள்ளாமல் சண்டை போடுவதை நிறுத்தவே இல்லை.
முற்றும்
