சொல்லிவிடு
சொல்லிவிடு
"தீபா நாளை நீ உன் முடிவை சொல்ல கடைசி நாள். சீக்கிரமாக சொல்லிவிடு. நாளை பொழுது பிறக்கும்போது எனக்கான மறுபிறவியும் உன் கையில் தான் உள்ளது... " என்று ஒரு அறியாத நபரிடம் தீபா கேட்ட வார்த்தைகள் அவளை சுத்தி சுத்தி வந்தது.
" தீபா விளக்குகளை கீழே எடுத்து வைக்க எனக்கு உதவி செய்" என தீபாவின் அம்மா குரல் கேட்க தீபா சென்றாள். அன்று மாலை தீபா அவளது தோழியிடம் நடந்ததைக் கூறினாள். அன்று ஒரு நாள் தன் கனவில் வந்த அதே நபர் இன்று காலை கடைக்கு செல்கையில் என் முன் தோன்றி அவர் தன்னை காதலிப்பதாகவும் நாளை முடிவைக் கூற சொல்லியதாகவும் கூறினாள் அவளது தோழிக்கும் ஒன்றும் புரியவில்லை. "கனவில் வந்தவரா... " என இழுத்தாள் அவள் தோழி. அந்நேரத்தில் தீபாவின் அம்மாவும் வேலைகள் அதிகமாக உள்ளது தனக்கு வந்து உதவி செய்யும்படி கூறினார்.
இரவு 12 மணி வந்தது. தீபாவளிக்கான நாளும் பிறந்தது. இரவே பட்டாசு தீபம் என அனைத்தையும் வைத்து மக்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அன்று இரவு அந்த நபர் தீபாவை சந்தித்தார் தீபாவிடம்" தன் வினாவிற்கான பதில் என்ன?" என்று கேட்டார். உடனே தீபா, "நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது திடீரென வந்து இவ்வாறு கூறினால் நான் என்ன செய்வேன்? ".
"சரி என்னை பற்றி கூறுகிறேன். நான் பிரபா. இதே ஊர்தான். உன்னுடைய சிறிய வயது நண்பன். இல்லை இல்லை உன்னுடைய சிறிய வயது... " என அவன் கூற வரவும் தீபா அவன் வாயைத் தன் கைகளால் மூடினாள். "எனக்கு புரிந்து விட்டது" என்றாள்.
"பின்பு என்ன என் கேள்விக்கான பதில் கூறலாமே" என்றான் பிரபா.
"இத்தனை நாள் எங்கிருந்தாய் பிரபா?"
" இந்த ஊரில்தான்... உன்கூடதான்... ஆனால் உனக்கு தான் தெரியவில்லை தீபா ".
தீபா சற்று நேரம் மௌனமாக இருந்தாள். அந்நேரத்தில் அவளை அவளது பக்கத்து வீட்டு தோழிகள் நடனமாட அழைத்தனர். இவள் புறப்படும்போது பிரபா தீபாவின் கையைப்பிடித்து " நானும் அந்த நடன விழாவில் இருப்பேன். எல்லோரும் தன் ஜோடிகளுடன் சேர்ந்து தான் ஆடுவார்கள். ஒருவேளை எனது பதிலுக்கு நீ சரி என ஒப்புக் கொண்டால் என்னுடன் நீ வந்து ஆடு" எனக் கூறினான். தீபா அவனது கையை தட்டி விட்டு சென்று விட்டாள். நடன நிகழ்ச்சி தொடங்கியது. தீபா அவளது தோழிகள் உடனே ஆடிக்கொண்டு இருந்தாள். அப்பொழுது பிரபாவுடன் இன்னொரு பெண் ஆடுவதை கண்ட தீபா, நேரடியாக அந்த பெண்ணிடம் வந்து பிரபாவுடன் நான் ஆடப் போகிறேன் நீ விலகி செல் என்று கூறிவிட்டாள். இதைப் பார்த்த பிரபா உடனே சிரித்து விட்டான்." என்னுடனே வந்து ஆடி இருக்கலாம் அல்லவா... " எனக் கூறி சிரிக்க தொடங்கிவிட்டான். உடனே தீபா சிரித்தது போகும் ஆடலாம் எனக் கூறி இருவரும் ஆடத் தொடங்கினார். இவர்களின் இந்த ஆட்டத்திற்கு காதலும் சேர்ந்து தாளம் தட்டியது. சிறிது நாட்களில் இருவீட்டாரின் சம்மதத்துடன் தீபா பிரபா கல்யாணம் இனிதே நடைபெற்றது.