Vadamalaisamy Lokanathan

Drama

4  

Vadamalaisamy Lokanathan

Drama

சிறு வயது எழுத்தாளர்

சிறு வயது எழுத்தாளர்

2 mins
349



ராஜாவிற்கு இன்றைய நாள் பெருமை சேர்க்கும் நாள்.ஆம் நாட்டின் தலை சிறந்த எழுத்தாளர் என்ற விருதை மேற்கு வங்காளம்

கல்கத்தாவில் நடை பெற்ற ஒரு கூட்டத்தில் அவருக்கு வழங்க பட்டது.

அதை வாங்கி கொண்டு,தன்னுடைய வளர்ச்சி எப்படி தொடங்கி இப்போது இந்த நிலைக்கு வந்துள்ளது என்பதை ஒரு வாழ்க்கை சரித்திரமாக சொல்லி கொண்டு இருந்தார்.

இளமையில் தான் எவ்வாறு எழுதும் பழக்கத்தை தொடங்கினார்.தன்னுடைய பத்தாவது வயதில்,தன்னுடைய காது கேட்காத அம்மாவிடம் பேசுவதற்கு

ஒரு சிலெட்டும் பென்சிலும் எந்த அளவிற்கு உதவியது என்று நினைவு கூர்ந்து பார்த்தான்.அம்மாவிடம் உரக்க பேசினாலும் புரியாது.ஆனால் அவருக்கு சிறிது கல்வி அறிவு இருந்தது, தன் தாயிடம் பேசும் போது

அவருடைய செய்தியை எழுதி காண்பிக்கும் போது தாயார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.காரணம் மகன் என்ன சொல்ல விரும்பினான் என்பதை சிரமம் இன்றி தெரிந்து கொண்டார்.

தினமும் நாட்டு நடப்பு,ராஜாவின்

அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் எழுதி காண்பித்து உணர்வுகளை பரிமாறி கொண்டனர்.

அதுவே நாளடைவில் பள்ளியில்,கல்லூரியில் நடக்கும்

எழுத்து போட்டிகளில் ராஜாவை வெற்றி பெற வைத்தது.அவ்வப்போது கலந்து கொண்ட பத்திரிகையில் நடக்கும் சிறு கதை போட்டியில் பங்கேற்று தன்னுடைய எழுதும் திறமைக்கு ஊக்கம் கொடுத்து,திறமையை மெருகு ஏற்றி கொண்டது அல்லாமல், தன் அனுபவங்களை வைத்து எழுதிய பல புத்தகங்கள் பிரபலம் அடைய துவங்கியது.

எளிமையான நடை,சில குறிப்பிட்ட ஊர்களில் நடந்ததாக எழுதிய கதைகள்,மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அது பல ஆண்டுகள் கடந்து அகில இந்தியாவில் தலை சிறந்த எழுத்தாளர் என்ற விருதை பெற்று தந்தது.அவருடைய புத்தகங்கள் அனைத்தும் அன்றாட வாழ்வின் அடிப்படையில் எழுத பட்டது.

படிப்பவர் தன் வாழ்கையில் நடக்கும் சம்பவங்கள் என்று நம்ப தொடங்கி

அடுத்த புத்தகம் என்னை பற்றி இருக்குமா என்று கற்பனை செய்யும் அளவிற்கு அவருடைய கதைகளில் உயிர் ஓட்டம் இருந்தது.

நாற்பது ஆண்டு உழைப்பு,இன்று அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்து உள்ளது.ஆனால் அத்தனையும் சக மனிதனை பற்றிய கதை தான்.அது பிரபலம் ஆக அவர் அதை சரியான முறையில் கையாண்டு பலரும் விரும்பும் வண்ணம் வடிவமைத்து கொடுத்தது தான்.

இதை சொல்லி முடித்ததும் கரவோசை விண்ணை பிளந்தது.


Rate this content
Log in

Similar tamil story from Drama