STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

5  

Vadamalaisamy Lokanathan

Abstract

சாகசம்

சாகசம்

2 mins
489

பிரபு பொதுவாகவே பயந்த சுபாவம் உள்ளவன்.சிவப்பு நிறத்தை பார்த்தால் பயந்து விடுவான்.இரத்தம் சிந்துவதை பார்த்தால் மயக்கம் போட்டு விடுவான்.இப்போது இருபத்தி ஏழு வயது நிறைந்த வாலிபன்.

படித்த பிறகு மேற்படிப்பு படிக்க அவனது பெற்றோர்கள் அவனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.வாலிப வயது வந்ததும் நண்பர்கள் கூட சேர்ந்து சுற்றியதில் கொஞ்சம் தைரியம்.ஆனாலும் இப்போது கூட இரத்தத்தை பார்க்க அவனுக்கு உள்ளூர பயம்.அதை வெளியில் காட்டி கொள்ளாமல் நடந்து வந்தான்.இவ்வளவு நாட்கள் பெற்றோர் அருகில் இருந்ததால்,அவனுக்கு கொஞ்சம் மனதில் பயம் இல்லை.இப்போது வெளி நாடு அனுப்பும் போது பெற்றோர் மனதில் பயம் தோன்றியது.

அங்கு இப்படி பயந்து விட்டால் என்ன செய்வது என்று.ஆனால் அவனுடைய அக்கா ஸ்னேகா வெளிநாட்டில்வசிப்பதால்,

அவளுடன் தங்கி தான் படிக்க போகிறான்.

ஸ்னேகா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.பிரபு வந்து ஒரு வாரம் ஆகி விட்டது.அவனுக்கு அவன் படிக்க போகும் கல்லூரி அருகில் தங்க இடம் தேட வேண்டி இருந்தது..

அதற்காக அவனையும் அழைத்து கொண்டு,அவளுக்கு தெரிந்த சில நண்பர்கள் மூலம் அவனுக்கு தங்க ஒரு இடம் தேடி கண்டு பிடித்து விட்டாள்.அடுத்த வாரம் அவன் புது இடத்தில் தங்கி படிப்பை தொடர வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொடுத்தாள்.

இந்த மகிழ்ச்சியை கொண்டாட அங்கு இருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு சுற்றுலா இடத்திற்கு அவளுடைய நண்பர்களையும் பிரபுவையும் அழைத்து கொண்டு ஒரு காரில் சென்றனர்.

போகும் வழியில் ஒரு விலங்குகள் சரணாலயம் வழியாக செல்ல,அதையும் கண்டு களிக்க உள்ளே சென்றனர்.

அங்கு எதிர்பாராதவிதமாக ஒரு யானை அவர்கள் காரை வழி மறிக்க, வேறு வழியில்லாமல் உயிருக்கு பயந்து காரில் இருந்து திசைக்கு ஒருத்தர் ஓட தொடங்கினார்கள்.பிரபு ஸ்னேகா கையை பிடித்து இழுத்து கொண்டு வேகமாக ஓட,ஒரு கட்டத்தில் ஒரு ஆறு குறுக்கிட,அதற்கு மேல் ஓடி தப்பிக்க வழியில்லை.ஆனால் யானை இவர்களை மிகவும் நெருங்கி விட,பத்தடி இடைவெளி தான் இருந்தது.

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.வேறு வழியில்லாமல்,

ஸ்னேகாவை இழுத்து கொண்டு,ஆற்றில் குதித்தான். ஆறு ஆழமாகவும்,அதில் நீரின் வேகம் அதிகமாகவும் இருந்தது.

ஸ்னேகா விற்கு நீச்சல் தெரியாது.

பிரபு கொஞ்சம் பழகி இருந்தான்.

ஸ்னேகா நீரில் மூழ்கி மூழ்கி வெளியில் வந்தாள்.இதை கண்ட அவன்,அவளை தன் கழுத்தை கோர்த்து பிடித்து கொள்ள சொல்லி விட்டு நீரின் போக்கில் நீந்த தொடங்கினான்.

அவனுக்கு எப்படி அந்த துணிச்சல் வந்தது என்று தெரியவில்லை.

எண்ணமெல்லாம் அக்காவை கரை சேர்த்த வேண்டும் என்பது தான்.

கால் இடறி கீழே விழுந்தது காரணம் அவள் தலையில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டும் இருந்தது.ஆனால் அதை பார்த்து பயப்படும் பிரபு,பயப்படாமல்,அக்காவை தோளில் சுமந்து நீந்தி கரை ஏறினான்.நண்பர்களும் ஆற்றில் குதித்து நீந்தி உயிர் தப்பி,பிரபுவை தொடர்ந்து கரைக்கு வந்தனர்.

அங்கு காவல் காத்து கொண்டு இருந்த போலீஸ் காரர்,முதலுதவி செய்து அவர்களை ஆசுவாச படுத்தி கொண்டு,இந்த ஆற்றில் குதித்தவர்கள் யாரும் உயிர் தப்பியது இல்லை.அவ்வளவு முதலைகள் வசிக்கின்றன.அதுவும் நீச்சல் தெரியாத சகோதரியை காப்பாற்றி கரைக்கு சேர்த்தது பெரிய சாகசம் என்று பிரபுவை பாராட்டி,எல்லோரும் பத்திரமாக அவர்களது காரை சென்றடைய உதவி செய்தார்.தம்பிக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது,நீச்சல் தெரியாத என்னையும் காப்பாற்றி அவனும் தப்பித்து கரை சேர்ந்தது கடவுள் புண்ணியம் என்று நினைத்து தம்பிக்கு தன் பாராட்டை தெரிவித்தாள்.ஆபத்து என்று வந்து விட்டால் மனிதனின் பயம் காணாமல் போய் விடுகிறது.



Rate this content
Log in

Similar tamil story from Abstract