அயலான்(alien)
அயலான்(alien)
முருகனுக்கு அவனுடைய ஊரில் உள்ள சிறிய குன்றின் உச்சியில் சென்று அவனுடைய கால்நடைகள் மேய விடுவது விருப்பம்.பெரிய உயரம் கிடையாது.ஏறுவதற்கு சரியான பாதையும் கிடையாது.
காலையில் சென்றால் அந்தி பொழுதுகளில் கீழே இறங்கி வருவான். மதிய உணவு,தண்ணீர் எடுத்து கொண்டு மேலே ஏறுவான்.
கூட இரண்டு பசு மாடு,மூன்று
ஆட்டுகுட்டிகள்.மேலே கால்நடைகள் நீர் அருந்த ஒரு குட்டை போல ஒரு குழியை வெட்டி
வைத்து இருந்தான்.அதில் மழை நீர் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
ஒரு நாள் மதிய வேளை,உண்டா மயக்கத்தில் ஒரு மரத்தின் நிழலில்
படுத்து ஓய்வு எடுத்து கொண்டு இருந்தான்.ஏதோ காற்று வேகமாக வீசும் சப்தம் கேட்டு கண் திறந்து
பார்க்க,ஒரு வினோத உருவம் நின்று கொண்டு இருக்க, பசு மாடு, ஆட்டு குட்டிகள் அவன் அருகிலl வந்து பயத்துடன் நின்றன.
ஒன்றும் புரியவில்லை.அந்த உருவம் சைகை காட்டி ஏதோ கேட்க,
சாப்பாடு கேட்கிறான என்று நினைத்து,மீதம் உள்ள சாப்பாட்டை
பாத்திரதுடன் கொடுத்தான்.
அந்த உருவமும் அதை வாங்கி ருசி பார்த்து விட்டு, முழுவதும் வாயில் அள்ளி போட்டது.
அதன் பக்கத்தில் பல் சக்கரம் போல வட்ட வடிவில் ஒரு சக்கரம் போல இருந்தது.உடனே அதில் அந்த உருவம் உக்கார அது காற்று அடிக்கும் திசையில் பறந்து மேலே சென்று மறைந்தது.அது போகும் போது பொன்னிறத்தில் ஒரு தகடு போல ஒன்றை அவனிடம் நீட்டி கொடுத்து விட்டு சென்றது.
அவனுக்கும் அது புரியாமல் எடுத்து கொண்டு கீழெ வந்தான்.
அம்மாவிடம் அதை கொடுக்க மகனே இது தங்கம் போல இருக்கிறது.என்று சொல்லி அதை அப்படியும் இப்படியும் தட்டி ஒரு சிறு துண்டை மட்டும் எடுத்து கொண்டு
நகை அடமான கடைக்கு சென்று கொடுத்து விட்டு கடன் கேட்க
அடமான கடைக்காரணும்,சுத்த தங்கம் இவளுக்கு எப்படி கிடைத்து இருக்கும் என்று எண்ணி பணத்தை கொடுத்து அனுப்பினான்.
இரண்டு நாள் முருகன் உடல்நிலை சரி இல்லாமல் போகவில்லை.
மூன்றாம் நாள் கூட கொஞ்சம் உணவை எடுத்து கொண்டு மேலே சென்றான். அன்று மதியமும் அந்த வினோத உருவம் வந்து இறங்கியது.அவனிடம் சாப்பாடு கேட்டு சாப்பிட்டு விட்டு மீண்டும் ஒரு தகடு கொடுத்து விட்டு சென்றது.அதையும் அவன் அம்மாவிடம் கொடுக்க,அதை அடமானம் வைக்க கடைக்கு சென்றாள்.சுமார் நான்கு நாட்கள் இது மாதிரி நடக்க,முருகன் பயந்து கொண்டு மேலே செல்லவில்லை
அதற்குள் அந்த ஊருக்கும் இதை பற்றி தெரிய,பல பேர் மலை உச்சிக்கு சென்று காத்து இருந்தனர்.ஆனால் யாரும் வரவில்லை.
அந்த அயலான் தன் தந்தையிடம்
உணவு உண்டதை சொல்லவரும் அது உண்மையா என்று பார்க்க அய்லானுடன் பூமிக்கு வர,அந்த கூட்டத்தை பார்த்து இறங்காமல் மேலே பறந்து விட்டனர்.
கூட்டத்தில் ஒருவன்,ஏதோ ஒன்று பறந்து செல்கிறது என்று கையை நீட்ட,அதற்குள் அயலான் கண்கானா உயரத்திற்கு சென்று விட்டான.ஏமாற்றத்துடன் எல்லோரும் வீடு திரும்பி வந்தனர்.
ஒரு வாரம் கழித்து முருகன் வீட்டை கண்டு பிடித்து இரவு நேரம் வந்து அவனை பார்த்து உணவு சாப்பிட்டு சென்றனர்.
முருகனும் அவர்கள் கொடுத்த தகட்டை வாங்காமல்,உஙக நட்பு
மட்டும் போதும் என்று
அடிக்கடி யாருக்கும் தெரியாமல் சந்தித்து வந்தனர்.அவர்களுக்கும் இவன் பேசுவது புரிய தொடங்கியது.
முற்றும்.