Vadamalaisamy Lokanathan

Fantasy

4  

Vadamalaisamy Lokanathan

Fantasy

அறிவியல் புனைந்த கதை

அறிவியல் புனைந்த கதை

2 mins
266


அறிவியல் புனைவு கதை

சந்திர மண்டலம்


இந்திய  விண்வெளி

 ஆராய்ச்சி மிகவும் வளர்ந்து,தனியார் பங்களிப்புடன் அசுர வளர்ச்சியை எட்டி உள்ளது.

இப்போது பூமியை அடுத்துள்ள சந்திரனுக்கு அடிக்கடி விண்கலம் சென்று வருகிறது.

இப்போதைய படிப்பு பெரும்பாலும் விண்வெளி ஆராய்ச்சி பற்றியதாகும். வேற்று கிரகங்களை ஆய்வு செய்வதில் போட்டா போட்டி.சுமார் ஐந்து இந்திய தனியார் நிறுவனங்கள் சந்திரனில் ஆராய்ச்சி மையம் அமைத்து,அங்கு விண்வெளி ஆராய்ச்சி பற்றி பாடம் நடத்தும் கல்லூரிகளை அமைத்து இருக்கிறார்கள்.இது போக,மனிதன் உடலில் பொருத்தும் நுண் தகடு உற்பத்தியும் சந்திர கிரகத்தில் செய்து வருகிறார்கள்.அது அங்கு கிடைக்கும் ஒரு வகை மண்ணில் இருந்து மட்டுமே தயாரிக்க படுகிறது.

விமானம் போல,ஒவ்வொரு பெரிய நகரத்தில் இருந்தும் விண்கலம் காலையில் புறப்பட்டு,இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு சந்திரனில் பயணிகளை இறக்கிவிட்டு திரும்புகிறது.

திரும்பி வரும் போது,அங்கு தயாரிக்கும் நுண் தகடு களை ஏற்றி கொண்டு வந்து பூமியில் விற்பனை செய்து வருகிறார்கள்.அந்த நுண் தகடு ஒருவரது உடலில் பொருத்தி கொண்டால்,அவரது உடலை பற்றிய அத்தனை தகவல்களும் மத்திய கணினியில் சேமித்து வைக்க படும்.

உடலில் தோன்றும் அனைத்து மாற்றங்கள்,நோய்கள் போன்றவை தரவுகளாக சேமித்து வைக்க முடியும்.

அதன் மூலம் மனிதர்கள்,தங்களுக்கு வரும் நோய்களை அந்த நுண் தகடு உதவியுடன் குணப்படுத்த முடியும்.


அதன் ஆயுள் அறுபது வருடம்.அதற்கு பிறகு பொருத்தும் நுண் தகடு,அரசாங்கம் அனுமதி கொடுத்தால் மட்டுமே பொறுத்த முடியும்.

அதற்கு பல பரிசோதனைகளும் தேர்வுகளும் கடந்தால் தான் அதற்கு அனுமதி கிடைக்கும்.ஒரு மனிதனின் புத்திசாலி தனத்தின் அடிப்படையில் மட்டுமே அதற்கு நீட்டிப்பு செய்து தரப்படும்.

எக்காரணத்தை கொண்டும் வேறு யாருக்கும் வழங்க படுவதில்லை.

தனியார் கொள்முதல் செய்ய இனி ஒரு நுண் தகடு விற்க படுகிறது.

உதாரணத்திற்கு ஒரு பிரபல விஞ்ஞானி காலமாகி விட்டால்,அவருடைய சேவை கிடைக்காமல் போகும்.அது போல உள்ள பிரபலங்களின் சேவையை தொடர்ந்து பெற்று வர,இனி ஒரு வகை நுண் தகடு உள்ளது.இது சாதாரணமாக கிடைக்கும் நுண் தகடை விட பத்து மடங்கு விலை அதிகம்.இதை வாங்கி இறந்தவரின் உடலில் மாட்டி கொண்டால் அவரது புத்திசாலி தனத்தை தடை இன்றி பெற்று கொள்ள முடியும்.அவருடைய உடம்பு மட்டும் இருக்கும்.உயிர் இருக்காது.அந்த நுண் த்தகடை அவர் உடம்பில் மாட்டி விட்டால்,அவருடைய அறிவு பூர்வமான ஆலோசனை கள் தடையின்றி பெற்று கொள்ளலாம்.உதாரணத்திற்கு பிரபல வக்கீல்,மருத்துவர்,பாடகர்,நூல் ஆசிரியர்கள் போன்றவர்கள்.

இது இந்தியாவில் மட்டும் கிடைப்பதால்,வெளிநாட்டில் அதற்கு மிகுந்த ஆதரவு உண்டு.

அதை விற்று இந்த நாடு நல்ல பணம் சம்பாதித்து கொண்டிருக்கிறது.இந்தியர்கள் மட்டுமே சந்திரனில் தங்கி உற்பத்தியை செய்ய முடிவதால் 

அதற்கு உலகம் முழுவதும் கிராக்கி அதிகம்.

முற்றும்…



Rate this content
Log in

Similar tamil story from Fantasy