Vadamalaisamy Lokanathan

Fantasy

4  

Vadamalaisamy Lokanathan

Fantasy

அப்பாவின் கஷ்டம்

அப்பாவின் கஷ்டம்

2 mins
356


அப்பாவின் கஷ்டம்.

ராஜாவின் அப்பா ஒரு விவசாயி.

நல்ல தண்ணீர் வசதியுடன் கூடிய நிலம்.தண்ணீர் வசதி இருந்ததால்

நல்ல விளைச்சல்.


ராஜா படித்து விட்டு பக்கத்து நகரத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான்.


விடுமுறையில் வந்த போது தான் வாங்கி உள்ள புதிய காரில் இரண்டு நாள் சில கோவில்களுக்கு சென்று வரலாம்,எப்போதும் நிலத்தை பார்த்து கொண்டே இருக்கிறீர்கள்.

அடிக்கடி குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள்.ஆனால் அழைத்தால் வர மறுக்கிறீர்கள் என்று புகார் கூறினான்.

அதற்கு அவனுடைய அப்பா,மகனே எனக்கும் விருப்பம் தான்.ஆனால் நிலத்திற்கு நீர் பாய்ச்சுவது ஒரு பிரச்சினை ஆக உள்ளது.அடிக்கடி

மின்சார மோட்டாரை இயக்க வேண்டி உள்ளது.அதன் பக்கத்தில் இருந்து,நிறுத்தவும்,இயக்கவும் செய்ய வேண்டி உள்ளது.சரியாக சாப்பிட கூட வீட்டிற்க்கு வர முடியவில்லை என்று கூறி வருத்த பட்டார்.

உடனே ராஜா,முன்னாடியே சொல்லி இருக்கலாம் அப்பா,சமீபத்தில் தான் 

ஒரு புத்தகத்தில் புதிய கண்டு பிடிப்பை பற்றி படித்தேன்.விவசாயிகள் மின் மோட்டாரை எங்கு இருந்து வேண்டுமானாலும் இயக்கலாம்.ஒரு கைபேசி மட்டும் இருந்தால் போதும்.

உங்களுக்கு நான் கற்று தருகிறேன்

என்று கூறி,நகரத்திற்கு சென்று,அதை இயக்க தேவையான கருவிகளை வாங்கி வந்து கிணற்று மோட்டாரில் மாட்டி,அதை எப்படி வீட்டில் இருந்த இயக்குவது என்று சொல்லியும் கொடுத்தான்.

கூடவே தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமரா மாட்டி தண்ணி விழும் இடம்,செல்லும் இடங்களை பார்க்க ஏதுவாக வழி செய்து கொடுத்தான்.

அதற்கு பிறகு நூறு மைல் தூரத்தில் இருந்தாலும் அவரால் நிலத்திற்கு நீர் பாய்ச்ச முடிந்தது.

மகனே நீ கற்ற கல்வி வீண் போகவில்லை.மிகவும் உதவியாக இருக்கிறது.இனி மேல் நீ எங்கு போக விரும்பினாலும் போகலாம் என்று கூறி மகிழ்ந்தார்.



Rate this content
Log in

Similar tamil story from Fantasy