அன்றாட வாழ்வில்
அன்றாட வாழ்வில்
அருள் அருள் என்று அம்மா கூப்பிட
அவனும் இருமா,வருகிறேன் என்று சொல்லி கொண்டு இருந்தான்.
ஆனால் வந்த பாடில்லை.
அப்படி என்னடா மலையை முறிக்குறே என்று மீண்டும் அம்மா கத்த
,மனமில்லாமல்,அப்பாவின் பைக்கில் இருந்து இறங்கி வந்தான்.
அப்பா ,அப்பா,பைக்கை துடைத்து வைகட்டுமா என்று நூறு தடவை கேட்டு இருப்பான்.சரி போடா என்று சொல்லி விட்டு அப்பா குளிக்க சென்று விட்டார்.
துணியை நீரில் நனைத்து சுத்தமாக துடைத்து அழுக்கை எடுத்து விட்டு பார்க்க,அது பள பளவென்று மின்னியது.
விடுமுறை என்பதால்,அவனுடைய நண்பர்கள் அப்பாவின் பைக்கை எடுத்து வந்து வித்தை காட்டுவார்கள்.
அருள் பத்தாவது போகிறான்.நல்ல உயரம்,பைக்கில் உட்கார்ந்து பார்த்தான்,கால் இரண்டு பக்கமும் ஊன்றி நிற்க முடிந்தது.பைக்கை சுத்தம் செய்ய அவனுக்கு ஐந்து நிமிடம் போதும்.அப்பா வெளியில் வர இன்னும் அரை மணி நேரம் ஆகும்.அது வரை அதில் ஏறி உட்கார்ந்து காலை ஊன்றி நின்று கொண்டு முன்புறமும் பின்புறமும் நகர்த்தி பார்த்துக்கொண்டு இருந்தான்.ஒரு நாளைக்கு சாவி வாங்கி ஸ்டார்ட் செய்து ஒட்டி பார்க்க வேண்டும்.அதற்கு அப்பா சம்மதிக்க வேண்டும்.அவனுடைய நண்பர்களின் அப்பாக்கள் அடிக்கடி மகனை ஒட்ட சொல்லி பின்னாடி உட்கார்ந்து கொண்டு ஒட்ட பழக்கி விடுவதை பார்த்து இருக்கிறான்.
ஆனால் அருள் அப்பாவிடம் கேட்க பயந்து கொண்டு இருந்தான்
இவன் செய்வதையெல்லம் அப்பா ஜன்னல் வழியாக தன் மனைவிக்கு காண்பித்து கொண்டு இருந்தார்.
அன்று ஞாயிறு விடுமுறை,அப்பா அலுவலகம் செல்ல வேண்டியது இல்லை.சரி வா,கடைக்கு சென்று மீன் வாங்கி வரலாம் என்று சொல்லி அழைத்து போனார்.
மீனை வாங்கி சுத்தம் செய்ய கொடுத்த போது,சுத்தம் செய்பவன்,சார் வெய்ட் பண்ணுங்க,நிறைய இருக்கு,ஒரு அரை மணிக்கூர் பிடிக்கும் என்று சொல்ல,அப்பா அருளை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த மைதானத்திற்கு அழைத்து சென்று,அவனை உட்கார வைத்து,எப்படி ஓட்டுவது என்று சொல்லி கொடுத்தார்.
ஆனால் பதினெட்டு வயதாகும் வரை தொட கூடாது என்று சொல்லி வைத்தார்.
அருள் எப்போ பதினெட்டு வயது ஆகும் என்று காத்து இருந்தான்.
ஆனால் அப்பாவிடம் அனுமதி வாங்கி கொண்டு வீட்டு வாசலில் பைக்கை ஸ்டார்ட் செய்து அங்கும் இங்கும் நகர்த்தி பார்த்து கொண்டு இருப்பது அவனுக்கு பெரிய மகிழ்ச்சி.
முற்றும்.
