Vadamalaisamy Lokanathan

Fantasy

4  

Vadamalaisamy Lokanathan

Fantasy

அந்நியன்

அந்நியன்

2 mins
349


அந்நியன்.

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மிகவும் முன்னேறி விட்டது.தற்போது செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இருக்கிறார்கள்.அதில் ஒரு சின்ன சிக்கல்.அனுப்பும் ஏவுகணை பூமியை விட்டு தாண்டி விண்வெளிக்கு சென்றதும் அங்கு இருந்து செவ்வாய் கிரகம் நோக்கி பயணம் செய்யும் போது பலமுறை வழி தவறி வேறு துணை கிரகங்களில் இறங்கி கொண்டு இருந்தது.அங்குள்ள வான் வெளியில் ஏதோ சிக்கல்.அந்த தகவல் சரியாக ஏவுகணை தளத்திற்கு கிடைப்பது இல்லை.

இதற்காக பல கோணங்களில் ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது.

ஒரு நாள் வான்வெளியில் வித்தியாசமான சத்தத்துடன் ஒரு பறக்கும் தட்டு வந்து தமிழ் நாட்டின் ஒரு பகுதியில் இறங்கியது.அது இரவில் நடந்ததால் அந்த தட்டு வந்து இறங்கியது யாருக்கும் தெரியாது.இறங்கியவுடன்,அதை இயக்கி வந்த விமானி,ரிமோட்டை அழுத்த அதன் மேல் பச்சை நிறத்தில் செடி கொடிகள் அதை மூடி விட்டன.


அந்த விமானி கண்கள் இருட்டில் பார்க்கும் திறன் உடையது.எந்த வெளிச்சமும் இல்லாமல்,அவனால் பிரதான சாலையை அடைய முடிந்தது.

விண்வெளி ஆராய்ச்சி மையம் இவன் இரங்கியதை கண்காணித்து விட்டது.ஆனால் இறங்கிய இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.தொடர்ந்து அவனை தொடர்பு கொள்ள முயன்ற போது அவன் அதை வேறு இடத்திற்கு கோதிருப்பி விட்டு கொண்டு இருந்தான்.

அவன் பிரதான சாலைக்கு வந்து தன்னுடன் இருந்த கருவி மூலம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அடைய முயற்சி செய்து கொண்டு இருந்தான்.அவனுடைய வானொலி தகவல் வேகம் இந்தியாவில் குறைவாக இருந்ததால்,அது சரியாக வழி காட்டவில்லை.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவன்,விநோதமான ஒரு ஆள் நிற்பதை பார்த்து,தைரியமாக வண்டியை நிறுத்தி அருகில் வந்து என்ன என்று கேட்டான்.அவனும் தட்டு தடுமாறி,இவனுக்கு பதில் கூற முயன்ற போது அவனுடைய வானொலி முற்றிலும் செயல் இழந்து விட்டது.அதுக்கு தேவையான சக்தியை விண்கலத்தில் இருந்து மாற்றாமல் வந்து விட்டான்..

அவனுடைய விண்கலத்தில் ஏற்பட்ட மின்கலம் ஏற்றம் இறக்கம் காரணம் இங்கு அவசரமாக தரை இறங்கி விட்டான். இனி அவன் வின்வெளிக்கு   செல்ல இந்தியா அனுப்பும் விண்கலத்தின் உதவியுடன் தான் வான்வெளிக்கு செல்ல முடியும்.மேலும் அவன் புறப்பட்ட கிரகம் கூட தொடர்பு கொள்ள ஆராய்ச்சி மையம் உதவி செய்தால் மட்டுமே அவனால் பேச முடியும்.

வந்த இருசக்கர வாகனத்தில் இருந்தவன் ஆராய்ச்சி மையம் தான் போய் கொண்டு இருந்தான்.சைகை மூலம் அந்நியன் புரிந்து கொண்ட பிறகு இருவரும் ஆராய்ச்சி மையம் சென்று அடைந்தனர்.

தலைமை விஞ்ஞானி அந்நியன் செய்த சைகை மூலம் அவனுடைய தேவையை புரிந்து கொண்டு அந்த கிரகத்தை தொடர்பு கொள்ள,அது செவ்வாய் கிரகம் என்று தெரிய வந்தது.இறுதியில் இவனுடைய பறக்கும் தட்டை விண்வெளிக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.அந்த உதவியை  தான் கேட்டார்கள்.அதற்கு

தலைமை விஞ்ஞானி ஒரு நிபந்தனை சொன்னார்.

இந்த பறக்கும் தட்டுடன் எங்கள் விண் கலம் ஒரு விஞ்ஞானி உடன் இணைத்து அனுப்புவோம்.சம்மதம் என்றால் உதவி செய்கிறேன் என்று பதில் அனுப்பினார்.

அதற்கு செவ்வாய் கிரகம் ஒத்து கொண்டது.அந்த பறக்கும் தட்டுடன் நம்முடைய விண் கலமும் இணைத்து வான் வெளிக்கு அனுப்ப, அங்கு இருந்து,செவ்வாய் கிரகம் நோக்கி புறப்பட்டது.வான் வெளியில் எதிர்பார்த்த காற்று அழுத்தத்தை விட குறைவாக இருந்தது.அதுவே தலைமை விஞ்ஞானிக்கு சவாலாக இருந்தது.இப்போது அது தெரிந்து விட்டது.இவர் அனுப்பிய விஞ்ஞானியும் அந்த அந்நியன் உதவியுடன் செவ்வாய் கிரகம் வரை சென்று விட்டு அவர்கள் திரும்பவும் வான் வெளிக்கு கொண்டு வந்து விட்டு விட்டார்கள்.

செவ்வாய் கிரகம் சென்று வந்த விஞ்ஞானி முக்கிய தகவல்களை சேகரித்து வந்தது, பிற் காலத்தில் விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவியது.

முற்றும்



Rate this content
Log in

Similar tamil story from Fantasy