STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

அம்மா

அம்மா

4 mins
9

அம்மா 


இனியன் அந்த குடும்பத்தில் கடைசி குழந்தை.அவன் அவனுடைய அம்மாவுக்கு நான்காவது மகன்.அம்மா பிரபா,எட்டாவது வரை படித்து விட்டு,பக்கத்து நகரத்தில், கார்மெண்ட் தொழிற்சாலைக்கு வார சம்பளத்திற்கு வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறாள். இனியனுக்கு நான்கு வயது.பள்ளியில் சேர்க்க வேண்டும்.இவனுக்கு மூத்த மூன்று அண்ணன்கள் ,பருவம் வந்ததும் அவனவனுக்கு பிடித்த வேலையை செய்ய,தூரத்தில் உள்ள நகரத்திற்கு சென்று விட்டார்கள்.வருடத்திற்கு ஒரு முறை வந்து அம்மாவையும் அப்பாவையும் பார்த்து விட்டு செல்வார்கள்.

வரும் போது,உடுத்த துணிமணி,அல்லது மளிகை சாமான்கள் ஏதாவது வாங்கி வந்து கொடுத்து விட்டு செல்வார்கள்.,.மூவரில் ஒருவன் போனஸ் கிடைத்தது என்று ஒரு ஐயாயிரம் ரூபாய் கொடுத்து விட்டு செல்வான்.

இனியன் அப்பாவும் கட்டிட வேலை செய்து வரும் மேசன்.மூன்று மாதத்திற்கு ஒரு முறை வந்து,கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு செல்வார்.

இவர்கள் யாரும் வராத நாட்களில் பிரபா கூலி வேலை செய்து கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தாள்.

முதல் மூன்று மகன்கள் அரசாங்க பள்ளியில் படிக்க வைக்க,மூன்று பேருமே படிப்பில் கவனம் செலுத்தாமல் கண்டவர்களுடன் சேர்ந்து ஊரை சுற்றி கொண்டு திரிந்தனர்.வீட்டில் சாப்பட்டுக்கு வழியில்லை என்று தெரிந்ததும் அவனவன் மனம் போன போக்கில் சென்று,கிடைத்த வேலையை செய்து,வயிற்றை கழுவி கொண்டு இருக்கிறார்கள்.

ஒரே ஒரு ஆறுதல்,கொஞ்சம் அறிவு வந்ததும்,எந்த கெட்ட பழக்கத்திற்கும் அடிமை ஆகாமல்,உழைத்து 

சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,கிடைத்த வேலையை செய்து வருகிறார்கள்.

அம்மாவை பார்க்க வரும் போது,

ஒவ்வொருவரும்,அம்மா நீ வேலைக்கு போக வேண்டாம்.நான் சம்பாதித்து கொடுக்கிறேன் என்று வாயளவில் சொல்லி சென்றாலும்,எப்படியும் ஒரு தொகையை அம்மா கையில் கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

பிரபாவுக்கு கடைசி மகனையாவது ஆங்கில வழி பாடம் நடத்தும் பள்ளியில் சேர்த்து நன்றாக படிக்க வைத்து பட்டம் வாங்க வைக்க வேண்டும் என்று விருப்பம். அண்ணன்கள் அரசாங்க பள்ளியில் படித்ததால்,கண்டிப்பு இல்லாமல் போய் விட்டது.தனியார் பள்ளி என்றால் கண்டித்து படிக்க வைப்பார்கள் என்று நினைத்து கொண்டு இருந்தாள்.


மற்ற மூன்று பசங்களும் வரும் போது,தன்னுடைய ஆசையை சொல்லி அழுவாள்.அவர்களும் தம்பியை உன் விருப்பம் போல படிக்க வை,பணத்தை பற்றி கவலை படாதே, என்று வாக்கு கொடுத்து இருந்தார்கள்.காரணம் படிக்காமல் விட்டது, ஊர் ஊராக சுற்றியது,அதன் நல்லது கெட்டது பற்றி நன்கு அறிந்து இருந்தார்கள்.

அந்த மூவருக்குமே அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும்.அம்மா எண்ணப்படி,தம்பி படித்து பெரிய ஆள் ஆகவேண்டும் என்று உறுதியாக இருந்தார்கள்.

பிரபா ஒரு வேளை சாப்பிட்டு,பணத்தை மிச்ச படுத்திஇனியனை ஆங்கில பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து,பட்டம் வாங்கி,IAS படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து இருந்தாள்.

வாக்கு கொடுத்த மூத்த மகன்கள்,அவரவர் விருப்ப படி திருமணம் செய்து கொள்ள,

புதிதாக வந்தமனைவிமார்கள்,அம்மா

வுக்கும் தம்பிக்கும் கொடுத்து உதவிய பணத்தை நிறுத்தி விட்டார்கள்.

அப்பாவும் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து இறந்து போக, பிரபா செய்வது அறியாது திகைத்து நின்றாள்.

இனியன் ஆங்கில வழி படித்தாலும்,அதை கற்றுக்கொண்டு மதிப்பெண் வாங்க சிரமம் பட்டான்.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கா

ததால்,பொறியியல் கல்லூரியில் பணம் கட்டி தான் படிக்க வேண்டும் என்ற நிலை உருவானது.

அப்போதும் இனியன் இரண்டு வருடம் வேலைக்கு சென்று சம்பாதித்து பிறகு படிக்கிறேன் என்று சொல்ல,அம்மா பிரபா காது கொடுத்து கேட்கவில்லை.

எப்படியாவது படிக்க வைக்கிறேன் என்று சொல்லி கொண்டே இருந்தாள்.இனியன் அம்மா கூலி வேலை செய்து எப்படிமா ஐந்து லட்சம் சேர்த்த முடியும்.நம்மை நம்பி யார் கடன் கொடுப்பார்,விடுமா,நான் கிடைக்கும் வேலைக்கு போய் சம்பாதிக்கும் வழியை பார்க்கிறேன்என்று திரும்ப திரும்ப சொன்னான்.

சரி காலையில் யோசிப்போம் படுத்து தூங்கு,பணம் கட்ட எவ்வளவு நாள் இருக்கு என்று கேட்டாள்.பத்து நாள் இருக்குமா என்று இனியன் சொல்ல,பிரபா ஒரு முடிவோடு தூங்க சென்றாள்.

அடுத்து மூன்று தினங்களுக்கு கிராமத்திற்கு செல்வதாகவும்,திரும்பி வரும் போது பணத்துடன் வருவதாகவும் சொல்லி விட்டு கிளம்பி சென்று விட்டாள்.

ஐந்தாவது நாள் கையில் ஏழு லட்சம் பணத்துடன் வந்தாள்.

பணத்தை இனியன் கையில் கொடுத்து பணத்தை கட்டி கல்லூரியில் சேர்ந்து அம்மா கனவை நன்வாக்கு. மீதி பணத்தை

படிப்பு முடியும் வரை செலவுக்கு வைத்து கொள்.

அம்மா மீண்டும் ஊருக்கு போக வேண்டி இருக்கு,கல்லூரியில் சேர்ந்து விட்டு இந்த நம்பருக்கு கூப்பிடு என்று சொல்லி விட்டு மீண்டும் கிளம்பி சென்று விட்டாள்.

இனியன்,அதற்கு பிறகு அம்மாவை பார்க்கவில்லை.அந்த நம்பரை கூப்பிட்டால் வேலைக்கு சென்று இருப்பதாக தகவல் சொன்னார்கள்.பட்டம் வாங்கிய பிறகு கூப்பிடு அம்மா புறப்பட்டு வந்து விடுவாள் என்று உறவினர் யாரோ பேசினார்கள்.

இனியனை பொறுத்த வரைக்கும் அது புதிது அல்ல,எங்காவது கடன் வாங்கி கட்டி முடித்த பிறகு வீடு திரும்புவது அவனை போல ஏழைகளுக்கு பழக்க பட்ட ஒன்று.

கடினமாக உழைத்து பட்டம் வாங்கி கணினி துறையில் வேலையும் வாங்கி விட்டான்.

அதை சொல்ல அந்த நம்பரை கூப்பிட,ஒரு விலாசத்தை கொடுத்து நேரில் வர சொன்னார்கள்.

அங்கு சென்றால் பிரபா உயிர்க்கு போராடி கொண்டு இருந்தாள்.அவனோ அழுது புரண்டு,ஏம்மா சொல்லி இருந்தால் நடுவில் வந்து பார்த்து இருப்பேன் என்றான்.கூட இருந்தவர்,பொறுமையாக இரு,உன்னை பார்த்தால் அம்மா குணமாகி விடுவார்கள்.

அம்மாவின் இந்த நிலைமைக்கு காரணம்,உன் படிப்பு செலவுக்கு வேண்டி தன்னுடைய சிறுநீரகம் ஒன்றை விலை பேசி விற்று விட்டார்கள்.உடம்பு முடியவில்லை என்று இங்கு வந்த போது தான் உண்மை தெரிந்தது.அன்று முதல் 

மருந்து மாத்திரை கொடுத்து இப்போ வரை அம்மாவை காத்து கொண்டு வந்து விட்டோம்.இனி நீ தான் பெரிய மருத்துவமனையில் சேர்த்து அவள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று அந்த நல்லவர் சொல்லி விட்டார்.

அப்போது தான் புரிந்தது ஒரு தாயின் வைராக்கியம்,அதுமதிப்பற்றது.கோடிகளில் கொட்டினாலும் அதற்கு ஈடாகாது.

ஆண்டவன் அருளால்,இனியன் அவனுடைய அம்மாவை காப்பாற்றி வீட்டில் வைத்து அம்மா கனவை நனவாக்கி வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.


அம்மா நினைத்தால் அகிலத்தையும் ஆண்டு காட்ட முடியும்.அன்னையை மதிப்போம்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract