அம்மா
அம்மா
அம்மா தெய்வானைக்கு நான்கு பிள்ளைகள்.மூன்று ஆண் ஒரு பெண்.
எல்லோரும் மணம் முடித்து அவரவர் விருப்பம் போல வாழ்ந்து வருகின்றனர்.அம்மாவிற்கு மூன்றாவது மகன் கூட இருக்க விருப்பம்.மருமகள் நன்கு கவனித்து கொள்வாள்.அதன்படி அங்கு வந்து வெகு காலம் வசித்து வந்தார்.பேரன் பிறந்து பதினாறு வயது ஆகும் வரை கூடவே இருந்தார்கள்.
விடுமுறையில் பேரனுடன் மகள் வீட்டிற்க்கு சென்றவர்,படுக்கையில் இருந்து விழுந்து இடுப்ப முறிந்து விட்டது.அதற்கு பிறகு மூத்த மகன் கூடவே இருந்து நன்கு கவனித்து கொண்டார்.அம்மாவின் மனதில் மூன்றாவது மகன் வீட்டிற்க்கு செல்ல விருப்பம்.மூன்றாவது மகனும் மருமகளும் வேலைக்கு செல்வதால் உன்னை பார்த்து கொள்ள முடியாது என்று கூறி அவரை அனுப்ப மறுத்து விட்டார் முதல் மகன்.இரண்டாவது மகன் தொலை தூரத்தில் இருந்ததால் அதை பற்றி கவலை படவில்லை.மகள் அடிக்கடி வந்து குளிக்க வைப்பது போன்ற வேலைகளை செய்து வந்தார்.அந்த ஏக்கத்துடன் சிறிது காலம் வாழ்ந்து இறந்து போனார்.மூன்றாவது மகனுக்கு அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்றாமல் போனது இன்னும் வருத்தம் தான்.
அம்மா மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இன்னும் இருக்கிறார்.