STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

அழியாதது

அழியாதது

2 mins
238

அழியாதது

சிதம்பரம் ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியர்.அதுவும் ஒரு சின்ன கிராமத்தில்.

அங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் வசதி இல்லாதவர்கள்.வெளியூர் சென்று ஆங்கில கல்வி கற்க,பொருளாதார வசதி இல்லாதவர்கள்.ஆனால் அந்த குழந்தைகளுக்கு மற்ற வசதியான குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் போல,வெளியூர் சென்று படிக்க முடியவில்லை,என்ற வருத்தம் நிறைய இருந்தது.அவர்களுடைய ஏக்கத்தை சிதம்பரம் நன்கு அறிந்தும்,புரிந்தும் இருந்தார்.

அவர் அனுபவத்தில் எல்லாமே கற்று இருந்தார்.அதற்கு அவருடைய வயதும் காரணம்.

ஆனால் மாணவர்கள் வருத்தத்தை எப்படி போக்குவது.

இங்கு படிக்கும் மாணவர்கள் தாய்மொழி தமிழ் வழி கல்வி பயின்று வருகிறார்கள்.வெளியூர் சென்று கற்பவர்கள் ஆங்கிலம் வாயிலாக கற்று. கொள்கிரார்கள்.

அது இந்த மாணவர்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று யோசித்தார்.


அன்றைய வகுப்பில் ஒவ்வொரு மாணவருக்கும் தன்னுடைய பெயரை,தாய்மொழியில் மற்றும் ஆங்கிலத்தில் எழுத சொல்லிக்கொடுத்தார்.அதற்கு அடுத்து வரும் நாட்களில்,வகுப்பிற்கு வந்ததும்,பெயரை ஒவ்வொருவரையும் எழுதி காண்பிக்க சொல்ல,எல்லோரும் பிழையின்றி,எழுதி காண்பித்தனர்.

அன்று வெள்ளிக்கிழமை,அடுத்து சனி,ஞாயிறு கிழைமகள் பள்ளி விடுமுறை.

வெள்ளி மாலை வகுப்பு முடிந்தது,எல்லோரும் புறப்படும் நேரத்தில் சிதம்பரம்,ஒவ்வோர் மாணவனாக அழைத்து கையில் ஒரோர் ரூபாய் கொடுத்தார்.இது செல்வம்,சேமிக்க சேமிக்க வளரும் என்று சொல்லிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

அடுத்தவாரம்,திங்கள் கிழமை மாணவர்கள் வந்ததும்,கொடுத்த பணத்தை என்ன செய்தீர்கள் என்று கேட்க,எல்லோரும் ஒருமித்து செலவழித்து விட்டோம் என்று உரத்த குரலில் சொன்னார்கள்.

சரி பரவாயில்ல,இனி இந்த தவறை செய்ய மாட்டேன் என்று ஒரு காகிதத்தில் எழுதி,அதில் அவரவருடைய பெயரை தாய் மொழி,மற்றும் ஆங்கிலத்தில் எழுதி கொடுக்க சொன்னார்.

சிலரை தவிர,மற்றவர்கள் தப்பு தப்பாக எழுதி பெயரையும் எழுதிக்கொண்டு வந்து கொடுத்தனர்.பெயரை எல்லோரும் சரியாக எழுதி இருந்தார்கள்.

அப்போது சிதம்பரம் மாணவர்களை பார்த்து சொன்னார்,பாருங்கள்,உங்களிடம் கொடுத்த பணத்தை எல்லோரும் செலவழித்து விட்டீர்கள்.ஆனால் சொல்லிக்கொடுத்த உங்கள் பெயரை எந்த பிழையும் இல்லாமல் எழுதி உள்ளீர்கள்.

ஒன்று புரிந்து கொள்ளுங்கள்,பணம் அழிந்து போக கூடியது.அதே நேரம்

உங்களுக்கு சொல்லி கொடுத்த கல்வி,உங்கள் பெயரை எழுதும் பயிற்சியை நீங்க மறக்கவில்லை.

மறந்தும் போகவில்லை.கல்வி எப்போதும் அழியாது.உயிர் போகும் வரை நீங்க படித்த பாடங்கள் உங்கள் நினைவில் இருந்து அழியாது.

பணம் எவ்வளவு சம்பாதித்தாலும்,ஒரு நாளில் செலவு அழிந்து போகும்.

நகரத்தில் படித்தாலும்,ஆங்கிலத்தில் படித்தாலும்,தமிழில் என்ன படித்தீர்கள் அது தான் ஆங்கிலத்திலும்.எப்படி படித்தாலும் அந்த கல்வி அழியாது.ஆனால் பணம் அழிந்து போகும்,என்பதை

புரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract