STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

ஆரஞ்சு

ஆரஞ்சு

2 mins
258

ஆரஞ்சு

நெருப்பு  அழித்து விடும் என்று தெரிந்தும் அந்த மலை முகட்டில் தீயை பற்ற வைத்தான் ரங்கன்.

சிறு பொறி பறந்தாலும் அந்த காட்டையே அழித்து விடும்.

ஆனால் அவன் வைத்த நெருப்பு பரவாது.

அவன் குறிக்கோள் காட்டுக்கு நெருப்பு வைப்பது அல்ல.அவனை யாரும் நெருங்க கூடாது என்பது தான்.

அவனுடைய முக்கிய தொழில்,செம்மரம்,சந்தன மரம் போன்றவற்றை கடத்தி விற்பது தான்.

அவனுடைய பங்கு மரங்களை அடிவாரம் கொண்டு சேர்ப்பது மட்டும் தான் அவனுடைய பொறுப்பு.அதற்கு பிறகு அதை வாங்கும் நபர் பொறுப்பு.

முகட்டில் நெருப்பு தெரிந்தால் சரக்கு தயார் என்று அர்த்தம்.அடிவாரத்தில் அந்த நேரத்தில் லாரிகள் வந்து அணி வகுக்கும்.

அன்று சூரியன் மறைந்த பிறகு முகட்டில் நெருப்பு எரிய தொடங்கியது.

லாரிகள் அணி வகுத்து செல்ல தொடங்கியது.

லாரிகள் அடிவாரம் சென்று அடைந்ததை உறுதி செய்த,வன சரக உயர் அதிகாரி போலீஸ் உதவியுடன்

லாரிகள் வரும் சாலையில் தடுப்புகளை வைத்து சாலையை அடைத்தனர்.அப்போது தான் மலை முகட்டில் நெருப்பு அனைக்கப்ட்டு இருப்பதை கவனித்த லாரிகள் பாரம் ஏற்றாமல் திரும்ப வர தொடங்கியது.

போலீஸ் வெறும் லாரிகள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்குள் எப்படி தகவல் அவர்களுக்கு கிடைத்து இருக்கும் என்று குழம்பி நின்றார்கள்.

வன சரக உயர் அதிகாரி மகன் தன்னுடைய பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாட, அந்த கூட்டத்திற்கு தேவையான அளவை விட அதிகமான கஞ்சா வந்து சேர்ந்து இருந்தது.

பிறந்தநாள் குழந்தைக்கு ஒரு அழைப்பு வர எடுத்து பேசினான்,எதிர்முனையில் வாழ்த்து கூறி விட்டு,சரக்கு வந்து விட்டதா என்று கேட்க,தேவைக்கு 

அதிகமாக வந்து இருக்கு ரங்கன்,நன்றி என இவன் கூற,பதிலுக்கு நீங்க செய்த உதவிக்கு இது மிகவும் சிறிய பரிசு தான் என்று ரங்கன் சொல்லி சிரித்தான்.


இப்படி அவனுக்கு யாராவது வலை வீச நினைத்தால் உடனே அவனுக்கு தகவல் வந்து விடும்.கொடுப்பது பிறந்த நாள் குழந்தை தான்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract