STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

ஆண்கள்

ஆண்கள்

2 mins
265

கவிதா அலுவலகம் செல்ல புறப்பட்டு வந்து ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்த போது,அது மறுத்து விட்டது.நேற்று வரை நன்றாக ஓடி கொண்டு இருந்த வண்டி,ஏதாவது அவசரமாக செல்ல வேண்டி இருந்தால்,அதன் புத்தியை காண்பித்து விடும்.இன்றும் அது போல.

உடனே உள்ளே சென்று தன் கணவன் கந்தனை கூப்பிட்டாள்.அவன் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறான்,அவனுக்கு பதினோரு மணிக்கு புறப்பட்டால் போதும்,இன்னும் படுக்கையை விட்டு எழுந்து இருக்கவில்லை.

திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகி விட்டது.அடுத்த வருடம் தான் பிள்ளை பெற்று கொள்ள திட்டம்.பிள்ளை பெற்ற பிறகு கண்டிப்பாக வேலைக்கு செல்ல மாட்டேன் என்று கவிதா பிடிவாதமாக கூறி இருந்தாள்.அவளும் ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுடன்ட் ஆக பணி புரிந்து வந்தாள்.

கந்தன் தூக்கத்தில் இருந்து எழுந்து வர,அவனிடம் அவளை அவளுடைய அலுவலகத்தில் இறக்கி விடும்படி கூற,அவனோ இரு ஒரு ஆட்டோ பிடித்து கொடுக்கிறேன் என்று கூறி,போனை எடுத்துட்டு புக் செய்ய தொடங்கினான்.

அவளுக்கு அவன் மீது அவ்வளவு கோபம்.ஒரு ஐந்து நிமிடம் கூட ஆகாது,அவன் வர தயங்குவதை பார்த்து,அவன் மீது அவ்வளவு எரிச்சல் பட்டாள்.

சொந்த அத்தை மகன் என்று கல்யாணம் செய்து கொடுத்து விட்டார்கள்.

அதனால் அவன் கூட சண்டை போட்டாலும், யாரிடம் புகார் சொன்னாலும் எடுபடாது.அவள் தான் பொறுத்து போக வேண்டும்.அவளுக்கு ஆண்களை கண்டாலே பிடிக்காது.ஆண்கள் பெண்களை அடிமையாக நடத்துகிறார்கள் என்று நினைத்து கொண்டு இருக்கிறாள்.அத்தை சாக கிடக்கும் போது மகனுக்கு திருமணம் செய்து பார்க்க ஆசை பட்டதின் விளைவு,இப்போது கவிதா அவனுக்கு மனைவி.

அவளுக்கு நிறைய கனவுகள் இருந்தது,தனக்கு வரும் கணவன் இந்தந்த குணங்கள் கொண்டவனாக இருக்க வேண்டும்,ஒரு நண்பனை போல தன்னை புரிந்து கொள்ள வேண்டும்,தன்னை தாங்க வேண்டும் என்றெல்லாம்,கனவு கண்டு இருந்தாள்.

ஆனால் நடந்ததோ வேறு விதம்.கந்தன் ஒரு சோம்பேறி,ஒழுங்காக உடை உடுத்த மாட்டான்,

அழுக்கு துணியை அணிந்து கொண்டு அவசரமாக ஓடுவான்.ஆசையாக சமைத்து வைத்து இருந்தாலோ,வெளியில் இருந்து உணவு வரவழைத்து சாப்பிடுவது,எந்த வித முன்னறிவிப்பு இல்லாமல் சாப்பிட்டு மேஜெயில் அமர்ந்து கொண்டு சீக்கிரம் சீக்கிரம் என்று கத்துவான்.

அவள் அப்போது தான் குளிக்க போய் இருப்பாள்.

பண்டிகை நாட்களில், தாய் வீட்டிற்க்கு செல்ல,அவனை சீக்கிரம் வர சொன்னால்,தாமதமாக வந்து,நண்பன் பிறந்தநாள்,தலையை காண்பித்து வந்தேன் என்பான்.

அவளுடைய பிறந்த நாள் வருகிறது ஆடை வாங்க வேண்டும் என்று அவனை கடைக்கு அழைத்து சென்றால் ஆடையை தேர்வு செய்து கொடுத்து விட்டு,பணம் கொடுக்க மாட்டான்,நீயே கொடுத்து விடு,உனக்கும் சம்பளம் வருகிறது என்பான்.

அவளுக்கு அவன் கையால் வாங்கி கொடுத்தது என்று சொல்லி கொள்ள ஆசை.

ஆசையோடு படுக்கைக்கு வந்தால்,உனக்கு இதே வேலை,மனுசனுக்கு ஓய்வு வேண்டாமா என்று கடுகடுப்பாக பேசுவான்.தொடவும் கூட மாட்டான்.


அவளுக்கு விரத நாட்கள்,பண்டிகை நாட்களில்,நேரமே குளித்து சாமி கும்பிட விரும்புவாள்,அவள் குளிக்கும் போதே, அவசரமாக பாத்ரூம் போக வேண்டும் என்று கதவை தட்டி,திறக்க வைத்து அவன் ஆசையை தீர்த்து கொள்வான்.

இதனால் அவனை ஒதுக்கவும் முடியாமல்,சேர்க்கவும் முடியாமல் இருதலை கொள்ளி போல துடித்தாள்.அவளுடைய தோழிகள் சொல்லும் கதையை கேட்கும் போது,இவளுக்கு பொறாமையாக இருக்கும்.எல்லோரும் கைக்குள் வைத்து இருப்பதாக சொல்லுவாங்க,அது போல நேரிலும் நடத்தியும் காண்பிப்பார்கள்.சில நேரங்களில் தனக்கு மட்டும் ஏன் இப்படி என்று வியந்து செயல் இழந்து உட்கார்ந்து விடுவாள்.

எல்லா ஆண்களும் இப்படி இருப்பார்களா,இல்லை தோழிகள் சொல்வது போல,அவர்கள் விருப்பத்திற்கு நடந்து கொள்வார்களா.என்று யோசித்து பார்ப்பாள்.

ஆனால் உண்மையில் ஆண்கள்,பெண்கள் மன் வருத்தம் அடைய கூடாது என்று வாழ்க்கையில் எத்தனையோ விட்டு கொடுத்து சென்று கொண்டு இருப்பதை யார் அறிவார்கள்.

ஆனால் அதிலும் விதிவிலக்கு இருக்கும் அல்லவா.

அது இவன்தான்,கந்தன்....



Rate this content
Log in

Similar tamil story from Abstract