விவசாயத்தில் பொய்த்துப் போன பருவ மழை
விவசாயத்தில் பொய்த்துப் போன பருவ மழை
விவசாயத்திற்குத் தேவையான பாசன நீர்க் குறைந்து கொண்டே வந்தது விவசாயக் கிணற்றினிலே!
தென்மேற்குப் பருவ மழைப் பொய்த்துப் போனது எங்கள் மாவட்டத்திலே!
உச்சி வெய்யில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது எங்கள் கிராமத்திலே!
அறுவடைக்குத் தயாராக வேண்டிய பயிர்கள் கருகி வருகிறது எங்கள் விவசாய நிலத்தினிலே!
தண்ணீர் உருண்டோட வேண்டிய விவசாய நிலம் பாளம் பாளமாக வெடித்து அலங்கோலமாகக் காட்சி தருகையிலே!
உழுது பயிர் செய்ய வேண்டிய காளை மாடுகள் குடிக்கத் தண்ணீர்க் குறைந்து நாக்கு வறண்டு நிற்கையிலே!
விவசாயப் பயிரின் அறுவடையினை சிறப்புடன் முடிக்க மழையினை எதிர்பார்த்து அண்ணாந்து பார்க்கிறேன் ஆகாயத்தினிலே!
மழையினை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும்பொழுது நாங்கள் எதிர்கொண்டு நிற்பது வறண்ட வானிலையிலே!
மழை வேண்டி இறைவனிடம் மன்றாடிப் பொங்கல் வைத்தோம் ஐயனாரின் கோவிலிலே!
அதிகமான ஆசையுடன் எங்கள் பகுதி விவசாயிகள் மயக்கிப் போய்ப் பார்த்து நின்று கொண்டிருந்தனர்! ஒரு கருமையான மேகத்தின் அழகிலே!
கருமையான மேகத்தினை பார்த்து மனம் மகிழ்ந்து மழை பொழிந்துவிடும் என்று ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கையிலே!
இருதியாக விவசாயிகளுக்குத் தெரிந்தது! அந்தக் கருமையான மேகம் மழை பொழியும் மேகம் அல்ல! என்கின்ற உண்மைப் புலப்படுகையிலே!
