STORYMIRROR

Uma Subramanian

Inspirational

4  

Uma Subramanian

Inspirational

விதையைத் தேடி...

விதையைத் தேடி...

1 min
237

சமைக்க ...

கத்தரிக்காயை வெட்டினேன் 

விதையைக் காணோம்!

தக்காளியை வெட்டினேன் 

விதையைக் காணோம் !

பீன்ஸை நறுக்கிறேன்

விதையைக் காணோம்!

சரி.... 

பப்பாளியை வெட்டினேன் 

விதையைக் காணோம்!

திராட்சைகளைக் கண்டேன்

விதைகளைக் காணோம்!

சரி...

பசு கருத்தரிக்க 

காளையைக் 

காணோம் 

பாலைக் கறக்க 

கன்றைக் காணோம்!

கூண்டில் கோழி தனித்திருக்க

கொக்கரக்கோ சேவலைக் காணோம்!

பரிணாம மாற்றம் 

பல பரிமாணங்களில் தேவையே!

ஆயினும் விதைகளின்றி

விளைபொருளா?

விதைகள் தாமே 

தலைமுறையை தருவிக்கும்!

மரபுப்பண்புகளை மண்ணில் 

விளைவிக்கும்!

மனித வெடிப்பிற்கு

விஞ்ஞானம் கை கொடுக்கட்டும்!

ஆரோக்கியத்திற்கு 

பகையல்லவா தருவிக்கும்!

விதையில்லா சதை

பிழையில்லை!

விஞ்ஞான வளர்ச்சிக்கு 

தடையில்லை!

பசுமைப் புரட்சி தேவையே

வேறு வழியில்லை!

ஆயினும்...

விதையின்றி விவசாயமா?

விதையை ஒளிப்பது நியாயமா?

விதையை ஒழிப்பது சரியாமா?

விதை உண்பதற்கு கடிதா? 

விழித்துக் கொள் மனிதா?

இவற்றை உண்டால்... 

நாளை உன் நிலை?

உயிர்கள் உள்ள வரை 

விவசாயம் நாளும் நடந்திடும்

விஞ்ஞானம் வளர்ந்தே கிடந்திடும்

விதையைத் தேடி

வீதியில் அலைந்திடும்

காலம் ஒருநாள் வந்திடும்! 

விதையை சேமி!

கதையில்லை சாமி!

இயற்கையை இயல்பாய் விட்டிடு

இயன்றவரை நன்மை செய்திடு!

விழித்தவன் பிழைப்பான்

பழித்தவன் கிடப்பான்!

 

  


     


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational