விழிநீர்
விழிநீர்
இருவிழியில் ஒருவிழியாய் இருதயத்துள் கலந்தவளே
ஈரிதழில் ஓரிதழை
இதமாகப் பதித்தவளே
அன்பென்ற வார்த்தையிலே
ஆளாகி நின்றவளே
அன்னைமடி மீதினிலே
என்னையும் புதைத்தவளே
உன்னுள்ளே என்னுள்ளே
உருவான காதலிலே
உள்ளமும் கலந்திடவே
ஒன்றானோம் நலமாக
கண்மணியே கருவிழியே கண்ணுறங்கு மண்ணுக்குள்ளே கண்ணீரும் வழியுதடி
மண்நீராய் உனைச்சேர
பிறக்கும் பொழுதெல்லாம்
இரவாய் ஆகுதடி
இருக்கும் நொடியெல்லாம் உன்நினைவைத் தேடுதடி
என்னுள்ளே வந்துவிடு
எனக்குள்ளே வாழ்ந்துவிடு
மண்குழி மேடேறி
மாமனோடு வந்துசேரு
தாலாட்டுப் பாடிடவே
தனியாக நிக்குறேன்டி
என்கூட சேர்ந்துபாட
எழுந்துவாடி என்னவளே.!