STORYMIRROR

SANTHOSH KANNAN

Romance

3  

SANTHOSH KANNAN

Romance

விழிநீர்

விழிநீர்

1 min
200

இருவிழியில் ஒருவிழியாய் இருதயத்துள் கலந்தவளே

ஈரிதழில் ஓரிதழை

இதமாகப் பதித்தவளே


அன்பென்ற வார்த்தையிலே

ஆளாகி நின்றவளே

அன்னைமடி மீதினிலே

என்னையும் புதைத்தவளே


உன்னுள்ளே என்னுள்ளே

உருவான காதலிலே

உள்ளமும் கலந்திடவே

ஒன்றானோம் நலமாக


கண்மணியே கருவிழியே கண்ணுறங்கு மண்ணுக்குள்ளே கண்ணீரும் வழியுதடி

மண்நீராய் உனைச்சேர


பிறக்கும் பொழுதெல்லாம்

இரவாய் ஆகுதடி

இருக்கும் நொடியெல்லாம் உன்நினைவைத் தேடுதடி


என்னுள்ளே வந்துவிடு

எனக்குள்ளே வாழ்ந்துவிடு

மண்குழி மேடேறி

மாமனோடு வந்துசேரு


தாலாட்டுப் பாடிடவே

தனியாக நிக்குறேன்டி

என்கூட சேர்ந்துபாட

எழுந்துவாடி என்னவளே.!



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance