வேறு புகலிடம்?
வேறு புகலிடம்?
தாயே!
உம் மக்கட்குறை தன்னை உரைக்கிறாயோ?
எம்மைக் காத்திட வருண தேவனை இறைஞ்சி நிற்கிறாயோ?
மழையைத் திட்டித் தீர்க்கிறாயோ?
எப்போது நிற்கும் என ஏக்கத்தோடு பார்க்கிறாயோ?
உம் சிறகை தாண்டி எமக்கு ஓர் புகலிடமோ?
மழை வந்த போதிலும்...
வெயில் வந்த போதிலும்...
அபாயம் வந்த போதிலும்....
அபயம் தேடிய போதிலும்....
அழகாய் சிறகை விரித்திடுவாய்!
அன்பாய் அள்ளி அணைத்திடுவாய்!
காலமெல்லாம் நாங்கள் ....
உம் சிறகுக்குள்ளேயே இளைப்பாறுவோம்!
உம் கதகதப்பிலேயே களைப்பாறுவோம்!
தாயே! நீயே அன்பின் வரையறை!
நீயிருக்கும் வரை அன்பிற்கு ஏது குறை?
உன்னை மிஞ்சிட உலகில் ஏது இறை?