உன்னிலும்
உன்னிலும்
பாலே!
என்னவளின் தூய்மை
அமைதி பொறுமை
உன்னிடத்தில் இல்லை!
நீ....
வெள்ளை வண்ணம் கொண்டிருப்பினும்...
உன்னுள் எதைக் கலந்திடினும் வண்ணம் மாறிடுவாய்!
உன்னைச் சூடு படுத்திவிடின்
பொங்கி எழுந்திடுவாய்!
என்னவள் உன்னிலும் உயர்வானவள்!
அதனால் என் உயிரானவள்!!+