உழவன்
உழவன்
கதிரவன் எழும்முன் தினம் எழுந்து!
வயலுக்குச் செல்வான் மனம் மகிழ்ந்து !
தண்ணீர் விடுவான் வாய்க்கால் வெட்டி!
நிலத்தை உழுவான் மாட்டை பூட்டி!
வேலியினைப் பயிர் சுற்றி அமைத்திடுவான்!
பயிர் வளர தினம் உழைத்திடுவான்!
இயற்கை உரங்களை அள்ளி அளித்திடுவான்!
களையினைக் கண்டதும் களைந்து விடுவான்!
பூச்சிகளிடமிருந்து பயிரைக்
காத்திடுவான்;
உழைப்பை அள்ளித் தானே அளித்திடுவான்!
வேதிப் பொருட்களை முற்றிலும்
மறுத்திடுவான்!
பலரிடம் தானே கடன் பெற்றானே!
அறுவடை செய்து நெல்லை விற்றானே!
பெற்ற முழுப்பணத்தை எடுத்துக்
கொடுத்தாலும்;
கடன் தான் இன்னும் தீரவில்லை!
உன்னத தொழிலை உயிராய் மதித்தான்!
பெற்ற கடனுக்காக உயிரை மடித்தான்!