ஸ்ரேஷீனா
ஸ்ரேஷீனா
விண்மீன்களுக்கு போட்டியாக மின்னி மின்னி ஒளியிடும் கண்கள்,
மலையைவிட கம்பீரமான மூக்கு, அதில் அரை நிலவு போல் மயக்கும் மூக்குத்தி,
செவ்வாயையே நாணத்தில் சிவக்க செய்யும் சிவப்பான உதடுகள்,
சூரிய மண்டலத்தையே வியக்கவைக்கும் நீள்வட்டவடிவமான ஒளிரும் முகம்,
சுழல் காற்றே ஊஞ்சலாட துடிக்கும் நளினமான கூந்தல்,
மொழியின்றி சொற்களின்றி எழுத்துக்களின்றி பாடும் கவிதைகளே அவள் நடனம்,
இந்திரலோகம் திக்குமுக்காடி நின்று, கைகொட்டி ஆர்ப்பரித்ததால் உருவான இடியும் மின்னலும் சரணடைந்தது இவளிடமே.