புத்தகம்
புத்தகம்
காகிதங்கள் ஒன்றாய் சேர்த்தே ,
ஆடை தரித்துள்ளேனே !
எழுத்துக்கள் ஒன்றாய் சேர்த்தே ,
அணிகலன்கள் அணிந்துள்ளேனே!
அழகாய் என்னை அலங்கரித்து ,
நற்கல்வி புகட்டியதொடு
பல இடங்கள் சுற்றிக் காட்டினேனே ;
தனிமை அவனை வாட்டியபோதும்
உடனிருந்து கவலை மாற்றினேனே;
வாழ்வில் முன்னேற நினைத்தபோதும்
துணை நின்று வழிகாட்டினேனே ;
அதனால் தானோ ,
மனிதன் என்னைத் தன் நண்பனாக்கிக்கொண்டானோ ?